மக்களின் கணினியை வேவு பார்ப்பது சரியா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
மக்களின் எலக்ட்ரானிக் சாதனங்களை அரசு கண்காணிப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி: மக்களின் எலக்ட்ரானிக் சாதனங்களை அரசு கண்காணிப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக மத்திய அரசு மற்றும் அரசு சாரா 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது. சிபிஐ, உளவுத்துறை, அமலாக்க துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம் உள்ளிட்ட 10 மத்திய அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு வழங்கி இருக்கும் புதிய அனுமதியின் மூலம் மக்கள் அவர்களுக்கு தெரியாமலே கண்காணிக்கப்படுவார்கள். அரசு நினைக்கும் யாருடைய கணினியையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும்.
இந்த நிலையில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா இந்த வழக்கை தொடுத்து இருந்தார். அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டம் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது, நீதிமன்றம் இதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 6 வாரத்திற்குள் இதில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எதனால், இதனால் மக்களின் சுதந்திரம் பறிபோகுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications