உமர் காலித் ஜாமீன் வழக்கு.. டெல்லி போலீசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி: டெல்லி கலவர வழக்கில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாணவர் உமர் காலித் உட்பட 5 மாணவர்களுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறைக்கு காரணம் என்று கூறி ஜேஎன்யு பல்கலை மாணவர் தலைவர் உமர் காலித் உட்பட ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது UAPA சட்டம் பாய்ந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரணை நடக்கவில்லை என்று மாணவர்கள் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஜாமீன் கோரியும் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு ஏற்கெனவே மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் மாணவர் தலைவர் உமர் காலித் உட்பட 5 பேருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது என மாணவர்கள் தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியிருந்தர். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த 5 மாணவர்களுக்கு தீபாவளிக்கு முன்னர் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை (செப். 19) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாததற்கு நீதிபதி குமார் வருத்தம் தெரிவித்தார். அவரது அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி மன்மோகன், ஒரு காலத்தில் கபில் சிபலின் அறையில் உதவியாளராக இருந்ததால், வழக்கிலிருந்து விலக விரும்பியதாகவும் எனவேதான் தமாதமாகியது என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு டெல்லி போலீசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். இந்த வழக்கு மீண்டும் அக்.7ம் தேதியன்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications