சாமியார்களின் ஹரித்வார் வன்முறை பேச்சு- உத்தரகாண்ட், டெல்லி அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: முஸ்லிம்களுக்கு எதிரான சாமியார்களின் ஹரித்வார் வன்முறை பேச்சு தொடர்பான வழக்கில் விளக்கம் கேட்டு உத்தரகாண்ட் மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தர்ம சன்சத் என்ற பெயரில் சாமியார்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சாமியார்கள் அல்லது அகோரிகளின் அமைப்புகளான அகாடாக்களின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்து பிரபாகரன் உருவாக வேண்டும்
இந்த கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதம் ஏந்த வேண்டும்; முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்; இந்துக்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய ஒரு பிரபாகரன் உருவாக வேண்டும்; ஒரு இந்து பிரபாகரனை உருவாக்கினால் ரூ1 கோடி பரிசு தரப்படும் என வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டும் வகையில் சாமியார்கள் பேசினர். இந்த பேச்சு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சாமியார்களின் இந்த பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க கோரியும் முன்னாள் பாதுகாப்பு படை தளபதிகள் எல். ராமதாஸ், அருண் பிரகாஷ், ஆர்.கே. தவன், எஸ்.பி தியாகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பினர். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு இது தொடர்பாக 76 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மேலும் மதவன்முறையை தூண்டும் வகையில் பேசிய சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுநலன் மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

உத்தரகாண்ட், டெல்லி அரசுகளுக்கு நோட்டீஸ்
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். கபில் சிபல் தமது வாதத்தில், தர்ம சன்சத் என்ற பெயரில் மேலும் சில இடங்களில் சாமியார்கள் மாநாடுகளை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த மாநாடுகள் நடைபெற உள்ளன. இம்மாநாடுகளுக்கு முன்னதாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் விளக்கம் அளிக்க கோரி உத்தரகாண்ட் மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை
முன்னதாக ஹரித்வார் பேச்சுகள் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட சாமியார்கள் மீது உத்தரகாண்ட் அரசு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வன்முறை பேச்சுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவையும் உத்தரகாண்ட் மாநில அரசு நியமித்தது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications