பேரறிவாளன் விடுதலையில் தாமதம் ஏன்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வதில் தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்த பெல்ட் வெடிகுண்டுக்கான பேட்டரியை வாங்கி கொடுத்த குற்றச்சாட்டில் தாம் சிறைவாசம் அனுபவிக்கிறேன்; ஆனால் பெல்ட் வெடிகுண்டு எங்கு யாரால் தயாரிக்கப்பட்டது என்கிற விவரத்தை சிபிஐ தமக்கு தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் சிபிஐ, மீண்டும் மீண்டும் ஒரே பதிலை அளித்ததால் உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளியிட்டது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் புதிய பதில் மனுவை தாக்கல் செய்தது சிபிஐ. அதில், பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய தகவல்களை திரட்ட முடியவில்லை. பெல்ட் வெடிகுண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என மனுதாரர் கூறுகிறார். வெளிநாடுகளில் விசாரிக்க பல வழிமுறைகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்வதில் தாமதம் ஏன் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications