முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறி பெண் ஊழியருக்கு மீண்டும் பணி
டெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாக புகார் அளித்த ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரது தனது புகாரில் கோகாயின் பாலியல் துன்புறுத்தலை தான் ஏற்காத காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் கூறி அதிரவைத்தார்.
இந்த புகாரை அடுத்து அவர் நீதிமன்றத்தில் வேறு துறைக்கு மாற்றப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தன்மீதானப் புகாரைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயே விசாரிக்க முன்வந்தார். அதன்பின்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இப்புகாரை விசாரித்தது. விசாரணை முடிவில் ரஞ்சன் கோகோய் குற்றமற்றவர் என்று தெரிவித்தது. இதற்கிடையே விசாரணை நடைபெறும் போதே அந்த பெண் ஊழியர் தனது புகாரை திரும்ப பெற்றார்.
இதனிடையே விசாரணை முடிந்த பின்னர் ரஞ்சன் கோகாய் மீது குற்றம்சாட்டிய பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. . அவர் பணியில் இல்லாத இடைப்பட்ட காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளமும் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பணியில் சேர்ந்த அந்த பெண் மீண்டும் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications