சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சாசனப் பிரிவு கடந்த மாதம் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சிறுவர்களும் கூட தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சிறார் உரிமை செயற்பாட்டாளர்கள் இனாக்ஷி கங்குலி, சாந்தா சின்ஹா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இவர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஹுஷேஃபா ஆஜராகி கருத்துகளை முன்வைத்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த அறிக்கையை ஒருவாரத்துக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீர் மக்கள் உயர்நீதிமன்றத்தை நாட முடியவில்லை என்கிற வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த புகார் நிராகரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் ஜம்மு காஷ்மீரில் 5 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக அம்மாநில நிர்வாகம் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications