மாஜி அமைச்சர் பா.வளர்மதி ’ஹேப்பி’- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் சூமோட்டோ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
2001-2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பா.வளர்மதி. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு வளர்மதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலை உத்தரவை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தாமாக முன்வைந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கில் பா. வளர்மதி தரப்பினர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனையடுத்து வழக்கின் விசாரணை வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்க தடை கோரி பா.வளர்மதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹரிரிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, பா.வளர்மதியை வழக்கில் இருந்து விடுதலை செய்து 10 ஆண்டுகளாகிவிட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கு மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் வழக்கை விசாரணைக்கு எடுப்பது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து பா.வளர்மதி விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹரிரிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமலும் ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
தற்போதைய அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை தீர்ப்பையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 'சூமோட்டாவாக' விசாரித்து வருகிறார். அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்க இருக்கிறார். தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தடை பிற வழக்குகளுக்கும் பொருந்துமா? என்பது திங்கள்கிழமையன்று தெரியவரும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications