பி.ஆர் கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவம்! வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்கு! விசாரணை தேதி அறிவிப்பு
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வரும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு அக்.27ம் தேதி நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 6 அன்று உச்சநீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவத்திற்கு எதிராக கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க இந்திய அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் அளித்ததாக, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், அக்டோபர் 16 அன்று நீதிபதி காந்தின் அமர்வு முன்பு தெரிவித்தார். இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் இந்த மனுவிற்கு ஆதரவு தெரிவித்தார்.
இருப்பினும், இந்த விவகாரம் மீண்டும் கவனத்திற்கு வருவதைத் தவிர்ப்பதற்காக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் அமர்வு தயக்கம் காட்டியது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடுவது புத்திசாலித்தனம் என்று அமர்வு குறிப்பிட்டது.
மேலும், முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல வழக்குகளுக்கு பயன்படுத்தக்கூடிய நேரத்தை இந்த விவகாரத்திற்காக செலவிடுவது சரியா என்றும் அமர்வு கேள்வி எழுப்பியது. ஆனால், இந்த சம்பவம் நிறுவனத்தின் கவுரவத்துடன் தொடர்புடையது என்று சிங் வலியுறுத்தினார்.
தாக்குதல் நடத்தியவர் தனது செயலை நியாயப்படுத்தி ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தலைமை நீதிபதி மீதான தாக்குதலை சமூக வலைதளங்களில் சிலர் பெருமைப்படுத்துவது பற்றியும் அவர் கவலை தெரிவித்தார். அத்தகைய பதிவுகளுக்கு எதிராக "ஜான் டோ" உத்தரவும் கோரப்படுகிறது என்று அவர் கூறினார்.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!












Click it and Unblock the Notifications