ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.. மத்திய அரசு
டெல்லி: நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இதனால் செப்டம்பர் மாதம் திறக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5ஆவது முறையாக லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில் பெரும்பாலான இயக்கங்களுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள்
ஒவ்வொரு முறையும் தளர்வுகளை மத்திய அரசு வெளியிடும் போது பள்ளித் திறப்பு எப்போது என்பது குறித்து பெற்றோர், மாணவர்கள் உற்று நோக்கி வந்தனர். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பள்ளி, கல்லூரிகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரிகள்
மே மாதம் கிடைத்த தகவலின்படி பள்ளி, கல்லூரிகள் ஜூலை மாதம் 30 சதவீத வருகை பதிவுடன் தொடங்கப்படும். 8-ஆம் வகுப்பு மாணவர்களை வீட்டிலிருக்க அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் உள்ள பள்ளிக் கல்லூரிகளை திறப்பது என்றும் சமூக பரவலை கடைப்பிடிப்பது, இரு ஷிப்ட்களாக பள்ளியை இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

33 கோடி பேர்
இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங் போக்ரியால் கூறுகையில் பள்ளி, கல்லூரிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் திறக்கப்படும். பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்த செய்திக்காக 33 கோடி மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Recommended Video

பொதுத் தேர்வு
அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யவே இதை கூறுகிறேன். ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தேர்வு முடிவுகளை அறிவிக்க முயற்சிக்கிறோம். ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பிரிவுக்கும் ஐசிஎஸ்இ/ஐஎஸ்சி பிரிவுக்கும் ஜூலை 1 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடத்தப்படும். அது போல் நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதியும், ஜேஇஇ ஜூலை 18 முதல் 23 ஆம் தேதியும் நடத்தப்படும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காய்ச்சல் இருக்கிறதா என பார்க்கப்படும். 3 பேர் அமரும் பெஞ்சில் இருவர் மட்டுமே அமர வைக்கப்படுவர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications