கொரோனாவின் ஆட்டம்.. தாமதமாகுகிறதா பள்ளிகள் திறப்பு.. மத்திய அரசு கூறியது என்ன?
டெல்லி: பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறந்து கொள்ள மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிர்கொல்லி நோயான கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டிவிட்டது. பலியானோரின் எண்ணிக்கையும் 100-ஐ தாண்டியது. இந்த நிலையில் இந்தியாவில் வைரஸ் அதிகமாக பாதித்தோரின் எண்ணிக்கையில் முதலிடத்தில் மகாராஷ்டிரா, 2ஆம் இடத்தில் தமிழகமும் உள்ளது.
இந்த நிலையில் டெல்லி, கேரளா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தியது.

ராஜ்நாத் சிங்
இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அமைச்சரவை கூட்டம்
அது போல் வழிப்பாட்டு தலங்கள், மால்களை திறப்பதற்கான கட்டுப்பாட்டையும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மே மாதத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளை திறந்து கொள்ளலாம் என மத்திய அரசுக்கு அந்த அமைச்சரவை கூட்டம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை
கொரோனா வைரஸ் 3ஆவது கட்டத்திற்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது. கோவிட் 19 நோயாளிகளுக்காக கோவிட் கேர் சென்டர்களை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த மருத்துவ வசதிகள் முழு மருத்துவ வசதிகளாக இருக்கலாம். மருத்துவமனையில் ஒரு கட்டடம் இதற்கென ஒதுக்கப்படுவதாகவும் இருக்கலாம்.

லாக் டவுன்
ஆனால் தனி நுழைவு வாயில், வெளியே செல்லும் வசதிகள், தனி ஐசியூக்கள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் என தனித்தனியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த 21 நாட்கள் லாக் டவுனை நீட்டிப்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications