Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதற்றத்தின் உச்சியில் லடாக்.. 5 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கைது! புதிய உத்தரவால் மக்கள் அச்சம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனி மாநில அந்தஸ்து கோரிய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், தற்போது லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு அடுத்த சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, காஷ்மீர் தனி மாநிலமாகவும், லடாக் பகுதியை சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரித்து மத்திய அரசு அறிவித்தது. விரைவில் லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அவ்வப்போது கூறி வந்தாலும், 6 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. இது தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது.

Leh Ladakh jammu kashmir

மாநில அந்தஸ்து மட்டுமல்லாது திரிபுரா, அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை போன்று லடாக்கையும் இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 15 நாட்களாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்க்சுக் உட்பட 10 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தை கலைத்த போலீசார், அவர்களை கைதும் செய்தனர்.

இதனையடுத்து புத்த மதத்தை பிரதிபலிக்கும் அமைப்பும், இஸ்லாம் மதத்தை பிரதிபலிக்கும் அமைப்பும் ஒன்று சேர்ந்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாஜக அலுவலகம், அரசு வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். இதனையடுத்த லடாக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பதற்றம் தணிந்துவிட்டது, போராட்டக்காரர்களை ஒடுக்கிவிட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இன்றும் அங்கு அமைதி திரும்பவில்லை.

எனவே, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 5 அல்லது அதற்கு அதிகமானோர் பொது இடங்களில் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, அனுமதியின்றி ஊர்வலம், பேரணி நடத்தவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. சரி, அனுமதி பெற்று பேரணி போகலமா? என்று கேட்டால், அனுமதியும் வழங்கப்படாது. அதேபோல போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்க்சுக் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. தற்போது அவர், ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த போராட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் அடைந்த ஏமாற்றங்கள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் விளைவு என்று ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தெரிவித்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் உரிமையாக இருந்த ஆர்டிகல் 370 ரத்து செய்யப்பட்டபோது யாரெல்லாம் வரவேற்றார்களோ, அவர்கள்தான் இன்று இந்த போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். எனவே மத்திய அரசு தனது தவறை உணர்ந்து, மக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+