ஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது
டெல்லி: உத்தரபிரதேசத்தில், ஓபிசி பிரிவை சேர்ந்த 17 ஜாதிகளை எஸ்சி பிரிவில் சேர்க்க யோகி ஆதித்யநாத் அரசு எடுத்த முடிவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் மாநில அரசிடம் பதில் கோரியுள்ளது. இதுபோன்ற முடிவை எடுக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று உயர் நீதிமன்றம் யோகி அரசுக்கு தெரிவித்துள்ளது. எஸ்.டி / எஸ்.சி ஜாதி பிரிவுகளில் திருத்தம் கொண்டுவர பாராளுமன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் ஹைகோர்ட் தெரிிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில், கடந்த பல தசாப்தங்களாக இந்த 17 சாதிகளையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் இருந்து பட்டியல் ஜாதி பிரிவில், சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முந்தைய பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி அரசுகளும் இதை முயற்சித்தன. ஆனால் மாநில அரசின் அதிகாரத்திற்கு வெளியே முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால், அதைச் செயல்படுத்த முடியவில்லை.
சமீபத்தில், யோகி அரசு ஜூன் 24ம் தேதியன்று ஒரு ஆணையை வெளியிட்டது . ஓபிசி பிரிவை சேர்ந்த 17 ஜாதிகளை மீண்டும் எஸ்சி பிரிவில், சேர்க்க ஏற்பாடு செய்தது.
மாவட்டங்களின் டி.எம்-க்கள், இவர்களுக்கு, பட்டியல் சாதி சான்றிதழ்களை வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் தடை விதித்த பின்னர், இப்போது இந்த 17 ஜாதிகளின் நிலை திரிசங்கு சொர்க்கம் போல மாறிவிட்டது.
இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தபோது, நீதிபதி சுதிர் அகர்வால் மற்றும் நீதிபதி ராஜீவ் மிஸ்ரா ஆகியோரின் டிவிஷன் பெஞ்ச் யோகி அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
அரசின் முடிவை நீதிமன்றம் தவறாக கருதுகிறது. இதுபோன்ற முடிவுகளை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications