நீங்க வரணும்.. 3 முக்கிய தலைவர்களை போன் போட்டு வளைத்த சரத் பவார்.. பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம்!
லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதிய திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதிய திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மொத்தம் 21 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைக்க இருக்கிறார்கள்.
ஆனால் காங்கிரஸ் தலைமையில் இந்த கூட்டணி அமையவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்று இருக்கும் மூன்றாவது கூட்டணியாக ஒரு கூட்டணியை உருவாக்க இருக்கிறார்கள்.

இடம்பெறவில்லை
ஆனால் இந்த கூட்டணியில் மூன்று முக்கிய கட்சிகள் இடம்பெறுவது இன்னும் சந்தேகமாக இருக்கிறது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த கூட்டணியில் சேர்வாரா என்பது கேள்வியாக உள்ளது. அதேபோல் ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் இன்னும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இன்னொரு நபர்
அதேபோல் ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவருமான, நவீன் பட்நாயக் எந்த கூட்டணியில் இணைவார் என்பது கேள்வியாக உள்ளது . இவர் ஒடிசாவிற்கு எந்த கட்சி அதிக நன்மைகள் செய்வதாக வாக்குறுதி வழங்குகிறதோ அந்த கட்சிக்கு, ஆதரவு அளிப்பேன் என்று கூறியுள்ளார்.

சரத் பவார்
ஆனால் இவர்கள் மூவரிடமும் 20 கட்சியை சேர்ந்த தலைவர்கள் பெரிய அளவில் நட்பில் இல்லை. இவர்கள் மூவரிடமும் நட்பாக இருக்கும் ஒரே தலைவர் என்று பார்த்தால் அது சரத் பவார்தான். தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், இதனால் இவர்கள் மூவரிடமும் போன் செய்து பேசி இருக்கிறார்கள். இவர்கள் மூவர்தான் கிங் மேக்கர்களாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

ஓகே சொல்லி இருக்கிறார்கள்
இந்த நிலையில் சரத் பவாரின் போன் கால் காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தை கொஞ்சம் சுமுகமாக முடிந்துள்ளது என்கிறார்கள். சந்திரசேகர ராவ் மற்றும் நவீன் பட்நாயக் இருவரும் காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணியில் சேர ஒப்புக்கொண்டதாக குறிப்பிடுகிறார்கள். இதுதான் பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஆனால் இன்னும் ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமே போன் காலை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

என்ன வாய்ப்பு
தற்போது ஜெகன் மோகன் ரெட்டி பயணத்தில் இருப்பதால் அவரிடம் சரத் பவார் பேச முடியவில்லை என்று கூறுகிறார்கள். அதே சமயம் ரெட்டி பெரும்பாலும் பாஜக கட்சிக்கு ஆதரவு அளிக்க முயற்சி செய்தாலும் கூட செய்வார் என்று கூறுகிறார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற கூட வாய்ப்பு இருக்கிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications