2 மாதங்களில் விற்பனையான தேர்தல் பத்திரங்களின் மதிப்பு என்ன.? வெளியான அதிர்ச்சி தகவல்..
டெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 கட்ட தேர்தல்கள் எஞ்சியுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் சுமார் ரூ.3.622 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடை உள்ளிட்ட பண பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மையை பின்பற்ற வசதியாக எஸ்பிஐ வாயிலாக, தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய குடிமகன் அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகியோரால் மட்டுமே இந்த பத்திரங்களை வாங்க இயலும்.

புனேவை சேர்ந்த விகார் துருவ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி எவ்வளவு தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது என்ற தகவலை அளிக்க கோரினார்.
அவரது இந்தமனுவிற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ரூ.3,622 கோடிக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது
இதில் கடந்த மார்ச் மாதம் ரூ. 1,365.69 கோடிக்கும், ஏப்ரலில் ரூ. 2,256.37 கோடிக்கும் தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் போது அதிக அளவாக ஏப்ரல் மாதத்தில் மும்பையில் ரூ. 694 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் ரூ.417.31 கோடிக்கும், டெல்லியில் ரூ. 408.62 கோடிக்கும் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் ரூ.3.622 கோடிக்கு நன்கொடை பத்திரங்கள் வாங்கி, கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டதில் இருந்து பாஜ.வுக்கு தான் அதிகளவில் பத்திரங்கள் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கு தான் இந்த பத்திரங்களை ஒருவர் வாங்க முடியும். ஆனால் ஒருவரே எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கி, தான் விரும்பும் கட்சிக்கு நன்கொடையாக வழங்க முடியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications