வெள்ளி வளையலுக்காக.. மூச்சிரைக்க சுடுகாட்டுக்கே ஓடிவந்த மகன்.. தாயின் விறகு கட்டை மீது ஏறி புரண்டு?
ஜெய்ப்பூர்: 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சவரன் ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.8,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போலவே வெள்ளியின் விலையும் உச்சத்துக்கு எகிறி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஒரு வெள்ளி வளையலுக்காக சுடுகாட்டில் மகன் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ளது விராட் நகர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பூரி தேவி, 80.. இவருக்கு மொத்தம் 7 மகன்கள். இதில் மூத்த மகன் கிர்தாரி லால் வீட்டில் பூரி தேவி தங்கி வந்தார்..

வெள்ளி வளையல்
கிரிதாரி லாலும் தன்னுடைய தாயை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். இதில் 5வது மகனான ஓம் பிரகாஷ் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில, வயது மூப்பு காரணமாக பூரி தேவி உயிரிழந்தார்... இதனால் அவரிடமிருந்த நகைகள் மூத்த மகன் கிர்தாரி லாலிடம் ஒப்படைக்கப்பட்டன... அத்துடன், பூரி தேவியின் வெள்ளி வளையல் ஒன்றும் மூத்த மகனிடமே ஒப்படைக்கப்பட்டன.. இந்த வளையில் சில ஆயிரம் ரூபாய் மதிப்பிலானது என தெரிகிறது.
இறுதிச்சடங்கு தாமதம்
பிறகு, பூரிதேவியின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சுடுகாட்டிற்கு 5வது மகன் ஓம் பிரகாஷ் ஓடிவந்தார்.. தாயின் வெள்ளி வளையல்களை தன்னிடம் தான் தர வேண்டும் என்று தகராறு செய்தார்.. ஆனால் குடும்பத்தினர் அனைவரும் இறுதிச்சடங்கு மும்முரத்தில் ஈடுபட்டிருந்தனர்..
இதனால் ஆத்திரமடைந்த ஓம் பிரகாஷ், தாயின் உடலை எரிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகள் மீது ஏறி படுத்துக் கொண்டார்."என் அம்மாவின், வெள்ளி வளையலை எனக்கு தராவிட்டால், அம்மாவுடன் சேர்த்து என்னையும் எரித்துவிடுங்கள்" என்று கதறினார்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகன், உடனடியாக வீட்டுக்கு சென்று, வெள்ளி வளையல்களை எடுத்து வந்து ஓம் பிரகாஷிடம் கொடுத்தனர்.
பரபரப்பு வீடியோ
அதன்பிறகே விறகு கட்டையிலிருந்து கீழே இறங்கி, இறுதிச் சடங்கை நடத்தவும் அனுமதித்தார் ஓம் பிரகாஷ்.. இதனால் இறுதிச் சடங்கு 2 மணி நேரம் தாமதமானது. சுடுகாட்டில் நடந்த இந்த தகராறை அங்கிருந்த ஊர்க்காரர் ஒருவர் வீடியோவாக எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிடவும், அதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications