சுதந்திரமில்லை.. தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை நடத்துகிறது! லோக்சபாவில் ராகுல் அட்டாக்
டெல்லி: பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை பலவீனமாக்கி உள்ளது. ஒவ்வொரு அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது. தேர்தல் சார்ந்த சிசிடிவிகள் தொடர்பான சட்டம் ஏன் மாற்றப்பட்டது? தேர்தல் முடிந்த 45 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை அழிக்க தேர்தல் ஆணையத்தை அனுமதிக்கும் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது? அதற்கான அவசியம் என்ன? இது 'தேர்தல் திருட்டு' தொடர்பான விஷயம்," . இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகிறது'' என ‛சார்' தொடர்பான விவாதத்தில் ராகுல் காந்தி லோக்சபாவில் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை பற்றிய விவாதம் தொடங்கியது. நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.

குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையம், பாஜகவுடன் கூட்டணி வைத்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:
பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை பலவீனமாக்கி உள்ளது. நான் 3 கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை அரசு மீட்டெடுக்குமா ? பல மாநிலங்களிலிருந்து வரும் புகார்களுக்கு மத்தியில், SIR செயல்முறையின் போது வாக்காளர் பட்டியல்களில் மோசடிகளைத் தடுக்க என்ன பாதுகாப்புகள் எடுக்கப்பட்டுள்ளன? தேர்தல் ஆணையத்தின் நியமனங்களும் முடிவுகளும் அரசியல் நலன்களுடன் அதிகரித்துள்ள நிலையில் வெளிப்படையான சீர்த்திருத்தங்களுக்கு அரசு உறுதியளிக்குமா'' என்று 3 கேள்விகளை ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எழுப்பினார்.
மேலும் தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில், ‛‛இந்தியாவின் நிறுவனங்கள் கைப்பறப்பட்டுள்ளன என் நான் நான் கூறுகிறேன். அதேபோல் தேர்தல் ஆணையம் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற புள்ளிக்கு நான் வருவேன். நாட்டின் நிறுவனங்களின் கட்டமைப்புகளை கைப்பற்றுவது தான் ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கமாகும்.
கல்வித்துறையில் குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் நியமனங்கள் உள்ளன. ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் விசாரணை அமைப்புகளின் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவற்றில் தங்களின் சித்தாந்தங்களை கொண்டவர்களை நியமித்து எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல்சார்ந்த சிசிடிவிகள் தொடர்பான சட்டம் ஏன் மாற்றப்பட்டது? தேர்தல் முடிந்த 45 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை அழிக்க தேர்தல் ஆணையத்தை அனுமதிக்கும் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது? அதற்கான அவசியம் என்ன? இது 'தேர்தல் திருட்டு' தொடர்பான விஷயம்," . இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகிறது.
சமீபத்திய ஹரியானா சட்டசபை தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் 22 முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இன்னொரு வாக்குச்சாவடியில் ஒரு பெண்ணின் பெயர் 200 முறை இடம்பெற்றுள்ளது.. ஹரியானா தேர்தல் திருடப்பட்டது என்பதையும், இது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டது என்பதையும் நான் தெளிவாக காட்டி உள்ளேன்.
-
தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications