குட்டி செமி பைனல்.. ராஜஸ்தான், ஹரியானாவில் 2 தொகுதிக்கு இடைத்தேர்தல்.. பரபர வாக்குப்பதிவு!
டெல்லி: ராஜஸ்தானில் உள்ள ராம்கார்க் மற்றும் ஹரியானாவில் உள்ள ஜிண்ட் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் பரபரப்பு இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. பல கட்சிகள் இந்த தேர்தலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் அமைதியாக ஒரு இடைத்தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு 4 மாதங்களே உள்ள நிலையில் தற்போது இந்த இரண்டு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

ஜிண்ட் தொகுதி
ஹரியானாவில் உள்ள ஜிண்ட் தொகுதி இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் எம்எல்ஏ ஹரி சந்த் மிதா மறைவிற்குபின் காலியானது. இந்த தொகுதிக்குத்தான் தற்போது தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் காங்கிரஸ், பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே நான்கு முனை போட்டியாக நடக்கிறது. பாஜக ஆளும் மாநிலம் என்பதால் இது அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது.

முடிவு எப்போது
இந்த தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வரும் 31ம் தேதி அறிவிக்கப்படும். ஜிண்ட் தொகுதியில் மொத்தம் 1.72 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் 44 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இதனால் அவர்களின் வாக்கு இதில் முக்கிய முடிவுகளை எடுக்க வைக்கும்.

ராம்கார்க் தொகுதி
அதேபோல் ராஜஸ்தானில் உள்ள ராம்கார்க் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடந்து வருகிறது.அங்கு ஆட்சி செய்யும் காங்கிரஸ், இந்த தொகுதியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுடன் இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. அங்கு பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால் தேர்தல் இங்கு மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.

விவரம்
பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் சிங் தேர்தல் சமயத்தில் மரணம் அடைந்துவிட்டதால் தேர்தல் நடக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. அங்கு தேர்தலுக்காக 278 பூத்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அங்கு 2 லட்சத்து 35625 வாக்காளர்கள் உள்ளனர்.இங்கும் தேர்தல் முடிவுகள் வரும் 31ம் தேதி அறிவிக்கப்படும்.

எத்தனை பதிவு
ஹரியானாவில் உள்ள ஜிண்ட் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இதுவரை 53% சதவிகித வாக்குகள் அங்கு பதிவாகி உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ராம்கார்க் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இதுவரை 56% சதவிகித வாக்குகள் அங்கு பதிவாகி உள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications