Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டின் வளர்ச்சியை கண்டு.. சிலர் பொறாமைப்படுகிறார்கள்.. நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமைப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக கூறினார்.

இந்தியாவின் பொருளாதாரம் பின்தங்கி இருப்பது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் நிர்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக கூறிய அவர், இது சிலருக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்.

ஐசியுவில் இந்திய ரூபாய்

ஐசியுவில் இந்திய ரூபாய்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.பி. அனுமுலா ரேவந்த் ரெட்டி, "இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் பலவீனமாகி வருவதை மத்திய அரசு அறிந்திருக்கிறதா? இன்றைய நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதன்முறையாக ரூ.83-ஆக சரிந்திருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது. இந்திய ரூபாயை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?" என அவர் கேள்வியெழுப்பினார்.

பொருளாதாரம் வலுவாக உள்ளது

பொருளாதாரம் வலுவாக உள்ளது

இதற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது: உலக அளவில் பணவீக்கம் நிலவி வருவதால் பெரும்பாலான நாடுகளின் செலாவணியின் மதிப்பு சரிந்து வருகிறது. ஆனால், நமது பொருளாதாரக் கொள்கைகளால் இந்திய செலாவணி மிக வலுவாக இருக்கிறது. பங்குச்சந்தையில் டாலர் - ரூபாய் இடையேயான மதிப்பில் அதிக அளவில் ஏற்ற இறக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக அந்நிய செலாவணிகளை ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருகிறது.

"சிலர் பொறாமைப்படுகிறார்கள்"

இந்தியாவின் பொருளாதாரம் அதீத வேகத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இந்தியர்கள் இதை பார்த்து பெருமிதம் கொள்ள வேண்டும். ஆனால் சிலரோ, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு இதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. இந்தியா இன்று சர்வதேச அளவில் 5-வது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

"பெருநிறுவன கடன்கள் ரத்து செய்யப்படவில்லை"

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சுப்ராயன், "பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கடன்களை ரத்து செய்துள்ளது. ஆனால் 0.82% மட்டும் இருக்க கூடிய உயர்கல்விக்காக கடன் பெற்ற ஏழை மாணவர்களின் கடனை ஏன் ரத்து செய்ய கூடாது?" என கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "பெருநிறுவனங்கள் கடனை மத்திய அரசு ரத்து செய்யவில்லை. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை ஏதோ பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்குவது போல உள்நோக்கத்துடன் எதிர்கட்சியினர் பேசுகின்றனர். இது முற்றிலும் தவறு. பெருநிறுவனங்களிடம் இருந்து இப்போதும் பணம் வசூலிக்கப்பட்டு, அதை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+