Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹிமாச்சலில் வேக்சின் தயாரிக்கலாம் என ரஷ்யாவுக்கு தெரிகிறது.. மத்திய அரசுக்கு தெரியவில்லை" - ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரால் ஹிமாச்சல பிரதேசத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தேவையான உள்கட்டமைப்பு இருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது, ஆனால் மத்திய அரசு இதைச் செய்யத் தவறிவிட்டதாக டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாகக் கருத்துகளை முன் வைத்துள்ளது.

Recommended Video

    Russia-வின் Sputnik Light Corona Vaccine எப்படி? | Single Dose Corona vaccine | Oneindia Tamil

    இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தடுப்பூசி இல்லை என்பதால் பல மாநிலங்களிலும் தடுப்பூசி பணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    டெல்லி உயர் நீதிமன்றம்

    டெல்லி உயர் நீதிமன்றம்

    இந்நிலையில், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (ஆர்.டி.ஐ.எஃப்) இணைந்து இந்தியாவின் பனசியா பயோடெக் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பது குறித்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மன்மோகன் மற்றும் நஜ்மி வஜீரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா 2ஆம் அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் வேதனை தரும் வகையிலிருந்ததாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    சிறப்பாகச் செயல்படலாம்

    சிறப்பாகச் செயல்படலாம்

    இது குறித்து அவர்கள் கூறுகையில், "கொரோனா 2ஆம் அலையை நாம் கையாண்ட விதம் வேதனை தருகிறது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறை அனைவரையும் கடுமையாகப் பாதிக்கிறது. தலைநகர் டெல்லியில்கூட அனைவருக்கும் நம்மால் தடுப்பூசி செலுத்த முடியவில்லை. இந்தியாவில் நிறைய நல்ல நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசு இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

    ரஷ்யாவால் முடிகிறது

    ரஷ்யாவால் முடிகிறது

    ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரால் ஹிமாச்சல பிரதேசத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தேவையான உள்கட்டமைப்பு இருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது, ஆனால் மத்திய அரசு இதைச் செய்யத் தவறிவிட்டது. மேலும், மத்திய அரசிடம் உரிய அனுமதியைப் பெற்ற பிறகே, பனசியா பயோடெக் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. எனவே, மத்திய அரசு அவர்களுக்கு 14 கோடி ரூபாய் உதவித்தொகையை அளிக்கலாம்" என்றனர்.

    ஸ்புட்னிக் வி உற்பத்தி

    ஸ்புட்னிக் வி உற்பத்தி

    இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை பேனேசியா பயோடெக் நிறுவனம் கடந்த மே 24ஆம் தேதி தொடங்கியது. ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் முதல் போட்ஜ் தடுப்பூசி தரநிலை பரிசோதனைக்காக ரஷ்யா அனுப்பப்பட்டது. இது குறித்துத் தான் நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+