"ஹிமாச்சலில் வேக்சின் தயாரிக்கலாம் என ரஷ்யாவுக்கு தெரிகிறது.. மத்திய அரசுக்கு தெரியவில்லை" - ஐகோர்ட்
டெல்லி: ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரால் ஹிமாச்சல பிரதேசத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தேவையான உள்கட்டமைப்பு இருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது, ஆனால் மத்திய அரசு இதைச் செய்யத் தவறிவிட்டதாக டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாகக் கருத்துகளை முன் வைத்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தடுப்பூசி இல்லை என்பதால் பல மாநிலங்களிலும் தடுப்பூசி பணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லி உயர் நீதிமன்றம்
இந்நிலையில், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (ஆர்.டி.ஐ.எஃப்) இணைந்து இந்தியாவின் பனசியா பயோடெக் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பது குறித்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மன்மோகன் மற்றும் நஜ்மி வஜீரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா 2ஆம் அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் வேதனை தரும் வகையிலிருந்ததாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சிறப்பாகச் செயல்படலாம்
இது குறித்து அவர்கள் கூறுகையில், "கொரோனா 2ஆம் அலையை நாம் கையாண்ட விதம் வேதனை தருகிறது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறை அனைவரையும் கடுமையாகப் பாதிக்கிறது. தலைநகர் டெல்லியில்கூட அனைவருக்கும் நம்மால் தடுப்பூசி செலுத்த முடியவில்லை. இந்தியாவில் நிறைய நல்ல நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசு இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

ரஷ்யாவால் முடிகிறது
ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரால் ஹிமாச்சல பிரதேசத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தேவையான உள்கட்டமைப்பு இருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது, ஆனால் மத்திய அரசு இதைச் செய்யத் தவறிவிட்டது. மேலும், மத்திய அரசிடம் உரிய அனுமதியைப் பெற்ற பிறகே, பனசியா பயோடெக் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. எனவே, மத்திய அரசு அவர்களுக்கு 14 கோடி ரூபாய் உதவித்தொகையை அளிக்கலாம்" என்றனர்.

ஸ்புட்னிக் வி உற்பத்தி
இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை பேனேசியா பயோடெக் நிறுவனம் கடந்த மே 24ஆம் தேதி தொடங்கியது. ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் முதல் போட்ஜ் தடுப்பூசி தரநிலை பரிசோதனைக்காக ரஷ்யா அனுப்பப்பட்டது. இது குறித்துத் தான் நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications