14 சதவீத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை.. மாநிலங்களுக்கு தராமல் துரோகம்.. மத்திய அரசை விமர்சித்த சோனியா
டெல்லி: 14% ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு தராமல் மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என 7 மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
கொரோனா நோய் தொற்றால் இந்தியாவில் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. வாட் வரி, கலால் வரி உள்ளிட்டவைகளால் மாநிலங்கள் 53 ஆயிரம் கோடி வருமானத்தை இழந்துள்ளன.

ஜிஎஸ்டி வரிகளில் விலக்கு அளித்துள்ளதால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வரி வருமானங்கள் குறையும். இதனால் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டுகளில் மாநில அரசுகள் வருமானத்திற்கு பதிலாக ரூ 1.2 லட்சம் கோடி இழப்பீட்டை சந்திக்கும் என தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கொரோனா காலத்தில் மாணவர்களின் உயிருடன் விளையாடும் வகையில் செப்டம்பர் 1 முதல் 6 வரை ஜேஇஇ தேர்வுகளையும், செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வுகளையும் நடத்த தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே தேர்வுகளை நடத்தக் கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் மாணவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணிக்கு 7 மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
இதில் சோனியா கூறுகையில், மதச்சார்பின்மை, அறிவியல் விழுமியங்களுக்கு எதிரானது தேசிய கல்வி கொள்கை. சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை சூழல் சட்டங்களை பலவீனமடைய செய்துவிட்டது. 14% ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு தராமல் மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்றார் சோனியா.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், புதுவை முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமண்ட் சோரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications