லோகோ பைலட்கள் தூங்கினால் பிடித்து கொடுத்துடும்.. விரைவில் வரப்போகும் வசதி?.. ரயில்வே மாஸ் பிளான்
டெல்லி: ரயில் பயணிகளின் சொகுசு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிகைகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது லோகோ பைலட் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்யும் வகையிலான கருவி ஒன்று தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்திய போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக உள்ளது ரயில்வே. பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் ரயில் சேவையை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதிலும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களே ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இத்தகைய பெரிய நெட்வொர்க்கை கொண்ட ரயில்வேயில் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. இருந்த போதிலும் சில நேரங்களில் மனித தவறுகள் காரணமாகவோ அல்லது தொழில் நுட்ப கோளாறு காரணமாகவோ விபத்து ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி 294 பேர் பலியான துயர சம்பவமும் நடைபெற்றது.
தூங்கிவிட்டால் ஒலி எழுப்பும் கருவி: இதுபோன்ற விபத்துக்கள் நேராமல் ஏற்படுவதை தடுப்பது எப்படி? லோகோ பைலட் பணியின் போது கவனத்துடன் இருக்கிறாரா? என்பதை கண்காணிப்பதற்கான கருவிகளை தயார் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக ரயில்வே வட்டார தகவல்கள் கூறியதாவது:-
வடகிழக்கு எல்லை ரயில்வே (NFR) இதற்காக செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்று தயார் செய்து வருகிறதாம். இது எப்படி வேலை செய்யும் என்றால் லோகோ பைலட் பணியின் போது கண்சிமிட்டுவதை கண்காணித்துக் கொண்டே இருக்கும். ஒருவேளை லோகோ பைலட் தூங்கிவிட்டால் உடனடியாக கண்டுபிடித்து லோகோ பைலட்டிற்கு எச்சரிக்கை ஒலி எழுப்பி அலார்ட் செய்யும்.
எப்போது தயாராகும்?: தேவைப்பட்டால், ரயிலை தானாகாவே நிறுத்தி விடும். ரயில்வே டிரைவர் உதவி அமைப்புக்கு (RDAS) அலர்ட் சென்றுவிடும் வகையில் இந்த கருவி தயாராகி வருகிறதாம். கடந்த ஜூன் மாதம் இதுபோன்ற ஒரு டிவைசை தயாரிக்குமாறும் ரயில்வே வாரியம் என்.எப்.ஆர்.இடம் கேட்டுக்கொண்டு இருந்ததாம். தற்போது கருவி இன்னும் தயாரிப்பு அளவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
கருவி சரியாக வேலை செய்கிறதாக என்பதற்காக அதன் டிரயல் நடப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த கருவி தயாராகி விடும் என்றும் சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 20 சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயிலில் பொருத்தி அதன் செயல்பாட்டை ஆய்வு செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
விமர்சனம்: அதன்பிறகு அனைத்து ரயில்வே தரப்பிலும் கருத்து கேட்ட பிறகு அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், இந்தியன் ரயில்வே லோகோ ரன்னிங்மேன் அமைப்பு, இந்த கருவியை பயனற்ற ஒன்று என்று விமர்சித்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரயில் லோகோ பைலைட்கள் 60 வினாடிகளுக்கு ஒருமுறை பெடலை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் ரயில் நின்று விடும்.
அப்படியான ஒரு சிஸ்டம் தற்போது உள்ளது. ஓட்டுநரை அலார்ட் செய்ய இதுவே போதுமானது. ரயில்வே உண்மையிலேயே ரயில் இயக்கத்தின் பாதுகாப்பில் அக்கறையோடு இருந்தால், லோகோ பைலட்களுக்கு இருக்கு சில குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும். போதிய உணவு இடைவேளை இன்றி கூட பணியாற்ற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதை சீர் செய்தாலே அவர்களின் பணித்திறன் மேம்படும்" என்று கூறியுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications