ஆளுநர்கள் அரசியல் செய்யக் கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கறார் கருத்து
ஆளுநர்கள் அரசியல் களத்தில் நுழையக் கூடாது என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து.
டெல்லி: மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியல் களத்தில் நுழையக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு, பாஜக இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக, சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்றது.

மகாராஷ்டிராவின் முந்தைய சிவசேனா அரசுக்கான நெருக்கடிகள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. இந்த வழக்கில் மகாராஷ்டிரா ஆளுநர் சார்பில் ஆஜரானார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.
துஷார் மேத்தா தனது வாதத்தை முன்வைக்கும் போது, நமது நாட்டில் இரு கட்சி ஆட்சி முறை என்பது இல்லை. இந்தியா என்பது பல கட்சிகளைக் கொண்ட ஜ்னாநாயக கட்டமைப்புள்ளது. பல கட்சி ஜனநாயகம் என்பது கூட்டணி அரசியல் யுகத்தைக் குறிப்பிடுகிறது. கூட்டணி என்பதும் இரு வகையிலானது. ஒன்று தேர்தலுக்கு முந்தையது; மற்றொன்று தேர்தலுக்குப் பிந்தையது.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது சர்ந்தர்ப்பவாத அடிப்படையில் எண்ணிக்கையை சமன் செய்யக் கூடியது. ஆனால் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்பது சித்தாந்தம் அல்லது கோட்பாடு அடிப்படையிலானது. மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முன்னர் சிவசேனா, பாஜக கூட்டணி இருந்தது. ஆகையால் வாக்காளர்கள் இரு கட்சிகளின் சித்தாந்த அடிப்படையில் வாக்களித்தனர். தேர்தல் களத்தில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே காங்கிரஸையும் தேசியவாத காங்கிரஸையும் எதிர்த்தார். ஆனால் அந்த இரு கட்சிகளுடன் இணைந்தே புதிய ஆட்சியையும் உத்தவ் தாக்கரே அமைத்தார். இவ்வாறு துஷார் மேத்தா கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ஆளுநர் என்பவர் நம்பிக்கை வாக்கெடுப்பை மட்டும் நடத்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசியல் களத்தில் நுழையக் கூடாது என குறிப்பிட்டார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications