ஆளுநர்கள் அரசியல் செய்யக் கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கறார் கருத்து
ஆளுநர்கள் அரசியல் களத்தில் நுழையக் கூடாது என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து.
டெல்லி: மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியல் களத்தில் நுழையக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு, பாஜக இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக, சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்றது.

மகாராஷ்டிராவின் முந்தைய சிவசேனா அரசுக்கான நெருக்கடிகள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. இந்த வழக்கில் மகாராஷ்டிரா ஆளுநர் சார்பில் ஆஜரானார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.
துஷார் மேத்தா தனது வாதத்தை முன்வைக்கும் போது, நமது நாட்டில் இரு கட்சி ஆட்சி முறை என்பது இல்லை. இந்தியா என்பது பல கட்சிகளைக் கொண்ட ஜ்னாநாயக கட்டமைப்புள்ளது. பல கட்சி ஜனநாயகம் என்பது கூட்டணி அரசியல் யுகத்தைக் குறிப்பிடுகிறது. கூட்டணி என்பதும் இரு வகையிலானது. ஒன்று தேர்தலுக்கு முந்தையது; மற்றொன்று தேர்தலுக்குப் பிந்தையது.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது சர்ந்தர்ப்பவாத அடிப்படையில் எண்ணிக்கையை சமன் செய்யக் கூடியது. ஆனால் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்பது சித்தாந்தம் அல்லது கோட்பாடு அடிப்படையிலானது. மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முன்னர் சிவசேனா, பாஜக கூட்டணி இருந்தது. ஆகையால் வாக்காளர்கள் இரு கட்சிகளின் சித்தாந்த அடிப்படையில் வாக்களித்தனர். தேர்தல் களத்தில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே காங்கிரஸையும் தேசியவாத காங்கிரஸையும் எதிர்த்தார். ஆனால் அந்த இரு கட்சிகளுடன் இணைந்தே புதிய ஆட்சியையும் உத்தவ் தாக்கரே அமைத்தார். இவ்வாறு துஷார் மேத்தா கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ஆளுநர் என்பவர் நம்பிக்கை வாக்கெடுப்பை மட்டும் நடத்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசியல் களத்தில் நுழையக் கூடாது என குறிப்பிட்டார்.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications