என் நண்பன் ராஜபக்சே.. சு.சாமிக்கு பயங்கர சந்தோஷம்!
டெல்லி: ராஜபக்சே பிரதமராகியிருப்பது குறித்து சுப்பிரமணியம் சாமி பயங்கர சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
என் நண்பன் ராஜபக்சே என்று டிவீட் போட்டு தனது குஷியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார் சாமி.
சமீபத்தில் டெல்லிக்கு வந்திருந்தார் ராஜபக்சே. அப்போது சாமியை சந்தித்தார். பிரதமர் மோடியைச் சந்தித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார். இந்த நிலையில் தற்போது பிரதமராகியுள்ளார்.
My friend Mahinda Rajapaksa has just been sworn in as Prime Minister of Sri Lanka
— Subramanian Swamy (@Swamy39) October 26, 2018
தமிழர்களின் முழுமையான விரோதியாக கருதப்படும் ராஜபக்சே பிரதமராகியிருப்பது உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இவர் பிரதமராகியிருப்பதை சாமி வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக சாமி போட்டுள்ள டிவீட்டில், எனது நண்பர் ராஜபக்சே சற்று முன்பு இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் என்று டிவீட் போட்டு கொண்டாடியுள்ளார் சாமி.