முதல்வராகும்போதா இப்படியாகனும்.. டி.கே.சிவகுமாருடன் இணைந்து எடியூரப்பா ஊழல்? உச்சநீதிமன்றத்தில் பரபர
Recommended Video
டெல்லி: இன்று மாலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருக்கு எதிரான 9 வருடத்திற்கு முந்தைய ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, 2010ம் ஆண்டு 4.20 ஏக்கர் பரப்பளவிலான அரசு கையகப்படுத்திய நிலத்தை விடுவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவகுமார் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபடுபவர். அரசியலில் எதிரி என்றபோதிலும், சிவகுமார் பலன் அடைய, எடியூரப்பா, குறிப்பிட்ட அரசு நிலத்தை கையகப்படுத்தாமல் விடுவித்தார். இதற்கு பதில், 'பிரதிபலனை' எடியூரப்பா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு 2015ம் ஆண்டு, பெங்களூர் ஹைகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை தொடர்ந்திருந்த கபாலேகவுடா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். ஆனால் சில மாதங்களிலேயே வழக்கை வாபஸ் பெற்றார்.
அப்போது கபாலேகவுடாவுக்காக வழக்கறிஞராக ஆஜரானவர் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். ஆனால் வழக்கை அவர் வாபஸ் பெற்ற நிலையில்,
சமாஜ பரிவர்தனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்ப்பில் வழக்கில் ஆஜராகிறார், பிரசாந்த் பூஷண்.
நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் இன்று ஆஜரான பிரசாந்த் பூஷண், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை திரும்பவும் விசாரிக்க கோரினார்.
எடியூரப்பாவை மாநிலத்தின் "அடுத்த முதலமைச்சர்" என்று அப்போது பிரசாந்த் அறிமுகப்படுத்தினார். "நாங்கள் எந்த பெயர்களாலும் அல்லது யாராலும் அசைவுறுவதில்லை" என்று உடனே குறுக்கிட்டு கூறினார், அருண் மிஸ்ரா.
எடியூரப்பாவுக்காக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஆஜரானார். 2015ம் ஆண்டு டிசம்பரில் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ஊழல் வழக்கை என்.ஜி.ஓ தேவையின்றி மீண்டும் தூண்டிவிட முயற்சிக்கிறது என்று அவர் வாதிட்டார்.
மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, சிவகுமார் தரப்புக்காக ஆஜரானார். அவர் வாதிடுகையில், பூஷன் முன்னதாக கபாலேகவுடாவின் வழக்கறிஞராக இருந்தார், பின்னர் அவர் வழக்கை வாபஸ் பெற்ற பிறகு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக வாதிட்டு வருகிறார். பூஷனுக்கோ அல்லது அந்த என்ஜிவோவுக்கோ இந்த வழக்கில் தொடர்பு இல்லை. நேரடியாக பாதிக்கப்படாதநிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனம், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்குமாறு உச்சநீதிமன்றத்தை எவ்வாறு கேட்டுக் கொள்ளலாம்? தலைவர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை எவ்வாறு தொடங்கலாம்? என்று சிங்வி கேள்வி எழுப்பினார்.
ஆனால் கபாலேகவுடா, எடியூரப்பா மற்றும் சிவகுமாருடன் "சமரசம்" செய்து கொண்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் இருந்து அவர் திடீரென வழக்கை வாபஸ் பெற இதுவே காரணம் என்றார் பிரசாந்த் பூஷன்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு, நாங்கள் இப்போது எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க தயார் இல்லை. வழக்கில் அடிப்படை ஆதாரம் உள்ளதா என்பதை விசாரிக்கும் வரை அது நிலுவையில் இருக்கும் என்று தெரிவித்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications