மறு உத்தரவு வரும்வரை.. பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்ய தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: அடுத்த உத்தரவு வரும் வரை பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும் லாக்டவுன் காலகட்டத்தில், மார்ச் மாதம், அதிக எண்ணிக்கையிலான பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதற்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
"லாக்டவுன் காலத்தில் அசாதாரண எண்ணிக்கையிலான பிஎஸ்-4 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன" என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 13ம் தேதிக்கு, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் டீலர்கள்
இம்மாத துவக்கத்தில், இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, ஆட்டோமொபைல் டீலர் சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை, முன்வைக்கப்பட்டது. அதில், விற்பனையாகாத, பிஎஸ்-4 வாகனங்களை தயாரிப்பாளர்களுக்கு அனுப்ப தேவையுள்ளது. அந்த வாகனங்களை அவர்கள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும்

பிற நாடுகள்
சில நாடுகளில் பிஎஸ்-4 வாகனங்களின் விற்பனை இன்னும் நடக்கிறது. எனவே உச்சநீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சிறப்பு அனுமதி
முன்னதாக மார்ச் 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 6 நாட்கள் அமலான லாக்டவுனால் ஏற்பட்ட விற்பனை சரிவை பூர்த்தி செய்ய பிஎஸ்-4 வாகனங்களில், 10 சதவீதத்தை விற்பனை செய்துகொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இருப்பினும் அதிக மாசுபாடு உள்ள டெல்லி-என்சிஆர் பிராந்தியத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெளிவாக கூறியிருந்தது.

உச்சநீதிமன்றம்
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இன்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. மார்ச், 29 முதல் 31ம் தேதி வரை பிஎஸ்-4 வகை வாகன விற்பனை அதிகரித்ததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், நீங்கள் சிக்கலில் மாட்டியுள்ளீர்கள். சட்டரீதியிலான நடவடிக்கையை எடுக்க உள்ளோம். உத்தரவை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

தளர்வுகள்
அதிக மாசு வெளிப்படுத்துவதால், பாரத் -4 வாகனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாகவே, சில தளர்வுகள் தரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications