Prathyusha: 23 ஆண்டு மர்மம் விலகுகிறதா? நடிகை பிரதியுஷா கொலையா? தீர்ப்பளிக்கும் உச்சநீதிமன்றம்!
டெல்லி: நடிகை பிரதியுஷா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் அந்த வழக்கில் இரு தரப்பு விசாரணையும் முடிவடைந்து விரைவில் தீர்ப்பளிக்கப்படுகிறது. இதன் மூலம் 23 ஆண்டுகளாக இருந்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறைக்கு வந்து சில படங்களிலேயே பெயரையும் புகழையும் சம்பாதித்து பிஸியாக இருந்த நடிகைகள் திடீரென படங்களே இல்லாமல் திருமணம் செய்து கொண்டு போய்விடுவார்கள்.
ஆனால் இன்னும் சில நடிகைகள் பெயர், புகழ், படங்கள் என கிடைத்தாலும் காதல் வலையில் விழுந்து தன்னையே மாய்த்துக் கொள்ளும் சூழலுக்கு சென்றுவிடுகிறார்கள். இதில் நடிகைகள் ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி, மோனல், பிரதியுஷா உள்ளிட்டோர் ஆவர்.
இவர்களில் பிரபல நடிகை பிரதியுஷா, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். ஒரு ரியாலிட்டி ஷோவில் இவர் கலந்து கொண்டதை அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. 1988 ஆம் ஆண்டு தெலுங்கில் மோகன்பாபுவின் படத்தில் இவர் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் தம்பி ராமையா இயக்கிய மனுநீதி என்ற படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து சூப்பர் குடும்பம், தவசி, கடல் பூக்கள், பொன்னான நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது 20 வயதில் பிஸியான நடிகையான பிரதியுஷா, 5 ஆண்டுகளில் 11 படங்களில் நடித்திருந்தார்.
பிரதியுஷாவும் சித்தார்த் ரெட்டியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதலுத்து சித்தார்த் ரெட்டியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் 2002 ஆம் ஆண்டு பூச்சிக் கொல்லி மருந்தை இருவரும் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் சித்தார்த் மட்டும் உயிர் பிழைத்துக் கொண்டார். பிரதியுஷா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்தார்த்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அதை 2 ஆண்டுகளாக நீதிமன்றம் குறைத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதியுஷாவின் தாய். கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். அவர் அங்கு தொடுத்த வழக்கில், "என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது இறப்பு திட்டமிடப்பட்ட ஒரு கொலை" என வாதிட்டார்.
இந்த வழக்கில் இரு தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். எனவே கடந்த 23 ஆண்டுகளாக பிரதியுஷா இறப்பில் நீடித்து வரும் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என தெரிகிறது. பிரதியுஷா ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications