Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Prathyusha: 23 ஆண்டு மர்மம் விலகுகிறதா? நடிகை பிரதியுஷா கொலையா? தீர்ப்பளிக்கும் உச்சநீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடிகை பிரதியுஷா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் அந்த வழக்கில் இரு தரப்பு விசாரணையும் முடிவடைந்து விரைவில் தீர்ப்பளிக்கப்படுகிறது. இதன் மூலம் 23 ஆண்டுகளாக இருந்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Prathyusha

திரைத்துறைக்கு வந்து சில படங்களிலேயே பெயரையும் புகழையும் சம்பாதித்து பிஸியாக இருந்த நடிகைகள் திடீரென படங்களே இல்லாமல் திருமணம் செய்து கொண்டு போய்விடுவார்கள்.

ஆனால் இன்னும் சில நடிகைகள் பெயர், புகழ், படங்கள் என கிடைத்தாலும் காதல் வலையில் விழுந்து தன்னையே மாய்த்துக் கொள்ளும் சூழலுக்கு சென்றுவிடுகிறார்கள். இதில் நடிகைகள் ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி, மோனல், பிரதியுஷா உள்ளிட்டோர் ஆவர்.

இவர்களில் பிரபல நடிகை பிரதியுஷா, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். ஒரு ரியாலிட்டி ஷோவில் இவர் கலந்து கொண்டதை அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. 1988 ஆம் ஆண்டு தெலுங்கில் மோகன்பாபுவின் படத்தில் இவர் அறிமுகமானார்.

பின்னர் தமிழில் தம்பி ராமையா இயக்கிய மனுநீதி என்ற படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து சூப்பர் குடும்பம், தவசி, கடல் பூக்கள், பொன்னான நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது 20 வயதில் பிஸியான நடிகையான பிரதியுஷா, 5 ஆண்டுகளில் 11 படங்களில் நடித்திருந்தார்.

பிரதியுஷாவும் சித்தார்த் ரெட்டியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதலுத்து சித்தார்த் ரெட்டியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் 2002 ஆம் ஆண்டு பூச்சிக் கொல்லி மருந்தை இருவரும் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

Actress Prathyusha

இதில் சித்தார்த் மட்டும் உயிர் பிழைத்துக் கொண்டார். பிரதியுஷா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்தார்த்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அதை 2 ஆண்டுகளாக நீதிமன்றம் குறைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதியுஷாவின் தாய். கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். அவர் அங்கு தொடுத்த வழக்கில், "என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது இறப்பு திட்டமிடப்பட்ட ஒரு கொலை" என வாதிட்டார்.

இந்த வழக்கில் இரு தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். எனவே கடந்த 23 ஆண்டுகளாக பிரதியுஷா இறப்பில் நீடித்து வரும் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என தெரிகிறது. பிரதியுஷா ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+