”வெறுப்பு பேச்சு”.. பிரிட்டன் சேனலுக்கு கிடைத்த ”தண்டனை” - இந்திய சேனல்களை எச்சரித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: பிரிட்டனில் வெறுப்பு பேச்சை ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சிக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், இந்திய தொலைக்காட்சிகள் வெறுப்பு பேச்சுக்களை ஒளிபரப்பி அதை வைத்து லாபம் அடைய நினைக்கும் அரசியல் வாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதாக விமர்சித்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் மதவெறுப்பு பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் எழுதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை கடந்த ஜூலை மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதிகள் சக்தி வாஹினி மற்றும் தெஹ்சீன் பூனாவல்லா அமர்வு வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பாக அளித்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

நெறியாளர்கள்
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜோசப், "தொலைக்காட்சி சேனல்களின் நெறியாளர்கள் விவாதத்துக்கு வரும் விருந்தினர்கள் எல்லையை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நெறியாளர் பணி என்பது மிகவும் நெருக்கடியானது.

தடுக்க வேண்டும்
தொலைக்காட்சி சேனல்கள் வெறுப்பு பேச்சுக்களை தடுக்க வேண்டும். இதில் முக்கியமான தொலைக்காட்சிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் இன்னும் அதிகளவில் இருக்கின்றன. இதுபோன்ற வெறுப்பு பேச்சுக்கள் தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் கட்டுபாடுகள் இன்றி சென்றுகொண்டிருக்கின்றன.

கொலையை போன்றது
எந்த அளவுக்கு கருத்து சுதந்திரம் முக்கியமோ அதே அளவுக்கு வெறுப்பு பிரச்சாரங்களை தடுக்க வேண்டும். பிரிட்டனில் வெறுப்பு பேச்சை ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சிக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது. வெறுப்பு பேச்சுக்கள் ஒருவரை கொலை செய்வதை போன்று பல்வேறு அடுக்குகளை கொண்டது. ஒருவரை மெதுவாகவோ அல்லது வேகமாகவோ கொலை செய்ய முடியும். அதே போன்றது வெறுப்பு பேச்சுக்கள்.

மத்திய அரசின் அமைதி
சில நம்பிக்கைகளின் அடிப்படையில் வெறுப்பு பேச்சுக்கள் ஈர்க்கப்படுகின்றன. மத்திய அரசு ஏன் இன்னும் வெறுப்பு பேச்சுக்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வெறுப்புப் பேச்சுக்களின் காரணமாக அரசியல்வாதிகளே அதிகம் பயன்பெறுகிறார்கள். அவர்களுக்கான களத்தை தொலைக்காட்சி சேனல்கள் அமைத்துக் கொடுக்கின்றன." என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications