விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிரான வழக்கு டிஸ்மிஸ்! சுப்ரீம் கோர்ட் சொன்ன முக்கிய பாயிண்ட்
வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
டெல்லி: வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சமீபத்தில் 5 பேர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
அதேபோல வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரும் சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.

கூடுதல் நீதிபதிகள்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இவர்களுக்கு விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த 5 பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை ஐகோர்டடில் இருக்கும் நீதிபதிகள் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது. வழக்குகள் நிலுவையில் இருப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கூடுதல் நீதிபதிகள் நியமனம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

வழக்கு
இதன் மூலம் சென்னை ஐகோர்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவி 18ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இதில் வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதைப் பல மூத்த வழக்கறிஞர்கள் எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாகப் பல மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் கொலிஜியத்திற்கும் கடிதம் எழுதியிருந்தனர்.. இது மட்டுமின்றி விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

ஒரே ஒரு முறை
இந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், வழக்கு விசாரணை நடக்கிறது. முதலில் இந்த வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பின் இது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.. இன்று காலை
விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது. அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்தே கொலீஜியம் பரிந்துரைத்திருக்கும் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தாங்களும் மாணவராக இருந்த போது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது என்றும் தெரிவித்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இன்று விசாரணை
1992இல் நடந்த இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டே வழக்கறிஞர் எல் விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.. மத சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை விக்டோரியா கவுரி பேசியுள்ளதாகவும் இதன் காரணமாக அவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது. அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் என்று முறையிட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

பரபர வாதம்
முதலில் இந்த வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்த நிலையில், பின் இது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.. காலை 10.30 மணிக்கு விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது. அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்தே கொலீஜியம் பரிந்துரைத்திருக்கும் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தாங்களும் மாணவராக இருந்த போது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாகப் பதவியேற்ற முன்மாதிரி உள்ளது என்றும் தெரிவித்தனர்.

நீதிபதிகள் கருத்து
இந்த மனுவுக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்வதற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கண்ணா, "தகுதிக்கும் பொருத்தத்திற்கும் வித்தியாசம் உள்ளது.. தகுதி குறித்து ஒருவர் மனு தாக்கல் செய்யலாம். ஆனால் பொருத்தமான நபரா என்று கேள்வி எழுப்ப முடியாது.. அந்த கேள்வி எழுப்பப்பட்டால் முழு செயல்முறையும் குழப்பமாகிவிடும்" என்று தெரிவித்தார்.

முக்கிய பாயிண்ட்
அப்போது மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், உரியத் தகவல் கொலிஜியத்திற்கு அளிக்கப்படவில்லை என்றும் இதனால் முடிவெடுக்கும் செயல்முறை தடைப்பட்டதாக வாதிட்டார். இருப்பினும், தங்களுக்கு அளித்த அனைத்தையும் படித்துவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அரசியல் பின்னணியைப் பொறுத்தவரை தனக்கும் அரசியல் பின்னணி இருந்ததாகவும் இருப்பினும் அது தனது கடமைகளுக்குத் தடையாக இருந்தது இல்லை என்றும் நீதிபதி கவாய் தெரிவித்தார்.

தள்ளுபடி
அப்போது வழக்கறிஞர் ராமச்சந்திரன், "இது அரசியல் பின்புலம் பற்றியது இல்லை.. இது வெறுப்பு பேச்சு தொடர்பானது.. வெறுப்பு பேச்சு என்பது அரசியலமைப்பிற்கு முற்றிலும் எதிரானது. இது அவரை தகுதியற்றவராக மாற்றுகிறது" என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், "தகுதி குறித்து எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றே நான் நினைக்கிறேன். கொலீஜியத்திற்கு எங்களால் எதுவும் கூற முடியாது.. கொலீஜியம் இந்த விஷயங்களைக் கணக்கில் கொண்டிருக்காது என்று கருத முடியாது" என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications