முல்லைப் பெரியாறு அணை விவகாரம்.. கேரள ஒத்துழைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம்.. சுப்ரீம் கோர்ட்
டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேரளாவுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான, இறுதி விசாரணை இரண்டாவது நாளாக நேற்று (மார்ச் 24) நடைபெற்றது.
அப்போது, பராமரிப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு, சாலை போடும் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக, இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு மேற்பார்வைக் குழுவே தீர்வு காணும் எனவும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு வரவேண்டாம் என்றும், நீதிபதி கண்வில்கர் கண்டித்தார்.

அப்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சேகர் நாப்டே கூறுகையில், "2006ஆம் ஆண்டே அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 2014ஆம் ஆண்டு தீர்ப்புக்குப் பின்னர், அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவின் பரிந்துரைகள் உத்தரவுகள் எதையும் கேரள அரசு பின்பற்றுவதில்லை" என்று தெரிவித்தார்.
மத்திய நீர் ஆணைய வழக்கறிஞரும் இதே வாதத்தை முன்வைத்தார். அப்போது மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றாத கேரள அரசின் தலைமைச் செயலாளருக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இதே நிலை தொடர்ந்தால், கேரள தலைமைச் செயலாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். மேற்பார்வை குழுவின் பரிந்துரைகள் கேரளா முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் இதில் கேரளா இடையூறு செய்தால் தமிழகம் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்தனர்.
மேற்பார்வைக் குழுவை மாற்றியமைக்கலாமா என்ற நீதிபதியின் கருத்துக்கு, தமிழ்நாடு மற்றும் கேரளா என இரு மாநிலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. தொடர்ந்து, இரு மாநிலங்களும் முல்லை பெரிய அணை விவகாரத்தில் இரு மாநிலங்களும் MINUTES OF ORDER விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications