FIR-ல் விஜய் பெயரே இல்லை! அவர் கரூர் போனால் என்ன தவறு! காப்பிய படிச்சீங்களா? நீதிபதிகள் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் திமுக அரசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், கரூர் சம்பவம் குறித்து முதல்வரும், அமைச்சர்களும் பேச தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
கரூர் வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரே இல்லாத போது அவர் கரூர் செல்வதில் என்ன பிரச்சினை என்றும் கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்புகளை தவெக அரசு வழங்கினால் எந்த வகையில் கரூர் வழக்கை பாதிக்கக் கூடும் என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ஆவணங்களை படிக்காமலேயே திமுக வழக்கறிஞர் வாதிடுகிறாரா?

கரூர் வழக்கு குறித்து விஜய்யும் அமைச்சர்களும் பேசத் தடை கேட்பதன் மூலம் பேச்சுரிமைக்கு தடை கோருகிறீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications