தேர்தல் பத்திரங்களால் கட்சிகள் பெற்ற நன்கொடை எவ்வளவு? தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆர்டர்
டெல்லி: தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இது தொடர்பான இன்றைய விசாரணையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 2018ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இவை மற்ற மாதங்களில் 10 நாட்களும் தேர்தல் இருக்கும் மாதங்களில் அனைத்து நாட்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தன.

இதன் மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக நடைபெற்ற விசாரணையில் தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரியல்ல என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிரான வாதத்தை வைத்த சொலிசிட் ஜெனரல் துஷார் மேத்தா,
"தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான். ஏனெனில் சிலர் குறிப்பிட்ட கட்சிக்கு அதிக அளவில் நிதியளித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் நிதியளித்த கட்சி தோல்வியடைந்தால், வெற்றியடைந்த கட்சியினர், தோல்வியடைந்த கட்சிக்கு நிதியளித்தவர்களை பழிவாங்கக்கூடும். எனவே தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான்" என்று கூறியிருந்தார். இதனையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அவர்கள், "இதுநாள் வரை தேர்தல் பத்திரங்கள் நன்கொடையின் தரவுகள் இருக்கிறதா?" என கேள்வியெழுப்பினர். ஆனால் இந்த தரவுகளை ஆணையம் பராமரிக்கவில்லை. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், தேர்தல் பத்திர நிதிகளின் தரவை இன்று வரை பராமரிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், செப்.30ம் தேதி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி விவரங்கள், நிதி கொடுத்தவர்களின் விவரங்கள் ஆகியவை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஏற்னெவே இந்த வழக்கின் விசாரணையில், அரசியல் கட்சிகள் எங்கிருந்து பணம் பெறுகின்றன என்கிற விவரங்களை அறிய மக்களுக்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications