கோவை குண்டுவெடிப்பு.. சிறைவாசிகளை விடுவிக்க அரசு எதிர்ப்பு! ஜாமீன் வழங்க மறுத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. 58 பேர் பலியாக காரணமான இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் கைதான அல் உம்மா அமைப்பை சேர்ந்த பாட்சா உள்ளிட்ட மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைதாகினர்.

இவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களில் பலர் உடல்நலக்குறைவு காரணமாக சிறையிலேயே உயிரிழந்தனர். ஆயுள் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருந்து வரும் இவர்களை விடுவிக்க வேண்டும் என திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மமக, எஸ்டிபிஐ, மஜக உள்ளிட்ட கட்சிகள் சென்னையில் இதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர்.
இவர்களை அண்ணா பிறந்தநாளன்று விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைகளை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் ஆணையத்தை அமைத்தார். அவரது அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்து உள்ளது. இந்த நிலையில் கோவை சிறைவாசிகள் விடுதலையில் அரசு மெத்தனம் காட்டுவதாக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மறுபக்கம் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சிறைவாசிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள்.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கவுல் அமர்வு முன்பு, கோவை சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித்தும் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "58 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயமடைந்தனர். பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்தன. கோவை நகரமே இந்த தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்படியான கொடுமையான சம்பவம் இது என்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது." என தெரிவித்துள்ளார். இதனை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி கவுல், இந்த வழக்கில் நிச்சயமாக நாங்கள் பிணை வழங்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
ஜாமீன் இல்லை என்பதில் எங்களுக்கு எந்த விதமான மாற்றுக் கருத்து இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இந்த வழக்கு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என தெரிவித்த அவர், அப்போது இதுகுறித்து பேசலாம் என தெரிவித்துள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications