குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை இல்லை: உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலில் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள், வன்முறைகள் நாடு முழுவதும் தொடருகின்றன.

நாங்கள் வழக்குகளை விசாரிப்பதே அமைதியை ஏற்படுத்தத்தான். போராட்டங்களும் வன்முறைகளும் முடிவுக்கு வரும் வரை இவ்வழக்குகளை விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் தெரிவித்தது.
இதன் பின்னர் கேரளா அரசு தரப்பிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 144 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இம்மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் அப்துல் நாசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இவ்வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு நடைமுறை தொடங்க உள்ளது. ஆகையால் சி.ஏ.ஏ.வுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறினர்.
மேலும் அஸ்ஸாமில் இச்சட்ட திருத்தத்தால் சமநிலை பாதிக்கும் என அஸ்ஸாம் மாணவர் சங்கம் வாதிட்டது. இதனையடுத்து அஸ்ஸாம் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் தனியே விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
144 மனுக்களின் வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் குவிந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, கூட்டத்தை ஒழுங்குபடுத்த பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டார்.
-
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications