370 நீக்கம்.. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு.. தீர்ப்பு எப்போது? ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசிலமைப்பின் 370 வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்து முடித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. மேலும் அந்த மாநிலத்துக்கு அரசியலமைப்பு சட்டத்தில் 370 வது பிரிவின் படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் கடந்த 2019 ல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்தது.

மேலும் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் என்பது லடாக், காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து அன்று முதல் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறவில்லை. துணை நிலை ஆளுநர் மூலம் அங்கு நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு நீக்கத்துக்கு தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டப்பிரிவு நீக்கம் என்பது ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமையை பறிப்பது போன்றது என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அதேபோல் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையே தான் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 நீக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் ஒரே வழக்காக எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
கடந்த 16 நாட்களாக தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு மற்றும் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய அரசு சார்பில் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதம் வைத்து வந்தார். இதையடுத்து மனுதாரர்களில் ஒருவரான தேசிய மாநாட்டு கட்சியின் எம்பி முகமது அக்பர் சார்பில் இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்மூலம் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications