சென்னை அரசு காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா பரவியது எப்படி.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: சென்னையிலுள்ள அரசு காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்ட விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது உச்சநீதிமன்றம். மேலும், தமிழக அரசு இதில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. காப்பாளருக்கு முதலில் கொரோனா தொற்று இருந்ததாகவும், ஆனால், அலட்சியமாக இருந்ததால் மற்ற சிறுவர்களுக்கும் தொற்று பரவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை ஊடகத்தின் வாயிலாக அறிந்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு.
"தமிழ்நாட்டில் உள்ள காப்பகத்தில் 35 குழந்தைகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய விரும்புகிறோம்." என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இந்த அமர்வில் நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

நீதிபதிகள் மேலும் கூறுகையில், காப்பக வார்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு கூறப்பட்டுள்ளது. எப்படி இது நடந்தது? என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். காப்பகத்தில் கொரோனா பரவுதல் மற்றும் நிலை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கையை சமர்ப்பிக்க மாநில சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு அடுத்து, ஜூன் 15 அன்று விசாரணைக்கு வரும். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நாடு முழுவதும், உள்ள காப்பகங்களில் வாழும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரிய பிரச்சினையை கவனத்தில் கொண்டு, உயர் நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் பதில்களைக் கோரி வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications