Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்பை தொடுவது பலாத்காரம் இல்லை என்ற ஐகோர்ட் தீர்ப்பை.. தாமாக முன்வந்து விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெண்ணின் மார்பகங்களைத் தொடுவது அல்லதது அவரது பைஜாமா கால்சட்டையின் நாடாவை அவிழ்ப்பது ஆகியவற்றைப் பலாத்கார முயற்சியாகக் கருதப்படாது என்று அலகாபாத் ஐகோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியது விவாதத்தைக் கிளப்பியிருந்த நிலையில், இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது..

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், பாலியல் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.

Supreme court taken note on Allahabad HC s Ruling Grabbing Breasts Not Considered sexual assault

அலகாபாத் ஐகோர்ட்

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அலகாபாத் ஐகோர்ட்டில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு பெண்ணின் மார்பகங்களைத் தொடுவதோ பைஜாமா கால்சட்டையின் நாடாவை அவிழ்ப்பதோ பலாத்கார முயற்சியாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. அலகாபாத் ஐகோர்ட்டின் இந்த கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு என்றால் என்ன என்பது குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்துக்குச் சட்ட வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நீதிபதிகள் இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைய அது காரணமாக இருந்துவிடும் என்றும் கூறியிருந்தனர்.

உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை

இதற்கிடையே இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. புதன்கிழமை (மார்ச் 26) நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இதில் சட்ட ரீதியான விளக்கங்களையும் கருத்துகளையும் உச்ச நீதிமன்றம் கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலகாபாத் ஐகோர்ட்

முன்னதாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டை உறுதி செய்ய அதற்கேற்ப சம்பவங்கள் நடந்து இருக்க வேண்டும் என்றும் அது பலாத்கார முயற்சி தான் என்று சொல்லும் அளவிற்கு உறுதியான சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் நீதிபதிகள் கூறினர். மேலும், அதனை விசாரணை அமைப்புகள் உறுதியாக நிறுவ வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்

மேலும், பலாத்கார முயற்சி குற்றத்திற்கும் அதற்குத் தயாராவதற்கும் வேறுபாடுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதையும் விசாரணையில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர். புதிய வழக்குகளை இதைக் கருத்தில் கொண்டே பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். பெண்கள் அல்லது சிறுமிகளின் மார்பகங்களைப் பிடிப்பதும், பைஜாமாவை அவிழ்ப்பது அல்லது அந்த பெண் அல்லது சிறுமியை மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வதைப் பலாத்கார முயற்சி அல்லது பலாத்காரமாகக் கருத முடியாது என்று அலகாபாத் கோர்ட் கூறி இருந்தது.

வழக்கின் பின்னணி

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 10ம் ததி மாலை 5:00 மணியளவில், பெண் ஒருவர் தனது கணவரின் சகோதரியின் வீட்டிற்கு சென்ருவிட்டு தனது 14 வயது தனது மகளுடன் கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட இருவர், மைனர் சிறுமியைக் கிராமத்தில் விட்டுவிடுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றுள்ளனர். சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண்ணும் மகளை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்..

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் செல்லும் வழியிலேயே டூவீலரை நிறுத்தி அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர்.. மார்பகங்களைப் பிடித்தும் பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்தும் அத்துமீறியுள்ளனர். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதிக்குச் சென்ற இருவர் சிறுமியை மீட்டுள்ளனர். இந்த வழக்கில் தான் அலகாபாத் நீதிமன்றம் மேற்கூறிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தது. அதைத் தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+