மத்திய அரசு வாதம் ஏற்பு.. ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50% கோட்டா இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், ஒரு குழுவை அமைக்கவும், அந்த குழு கொடுக்கும் பரிந்துரைப்படி இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்றும் கடந்த ஜூலை 27ம் தேதி உத்தரவிட்டது.

அதேநேரம், இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமென கோரி தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு வாதம் செய்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இவ்வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு வழங்குவதாக ஒத்திவைத்தது.
இந்த தீர்ப்பின் மீது கடும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது.
இதுகுறித்து திமுக எம்பி வில்சன் கூறுகையில், இம்முறை ஓபிசியை சேர்ந்த ஒருவருக்கும் பலன் கிடைக்காமல் போயுள்ளது. ஹைகோர்ட் அமைத்த கமிட்டி அடுத்த ஆண்டு முதல் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். ஆனால் அந்த கமிட்டியில், துறை சார்ந்த நிபுணர்கள் நியமிக்கப்படவில்லை. செப்டம்பர் 7ம் தேதிதான் கமிட்டி ஆரம்பித்துள்ளது. செப்டம்பர் 27ம் தேதிதான் முதல் மீட்டிங் நடந்துள்ளது. இவ்வாறு வில்சன் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications