தேர்தலில் வாக்களிக்க இனி கைரேகை - கருவிழி பயேமெட்ரிக் அடையாளம் கட்டாயம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பதை தடுக்கும் வகையில் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் அடிப்படையில் பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் பயோமெட்ரிக் முறையில் வாக்காளர்களை அடையாளம் காணும் முறையை அமல்படுத்தவது பற்றி ஆராய வேண்டும் என்று கூறி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் வழங்கியது.

சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின்போது கள்ள ஓட்டு போடும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் தான் தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பதை தடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் சில முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அதன்படி, ''தேர்தல் நியாயமாக நடக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது, ஆள்மாறாட்டம், ஒருவரே கூடுதல் வாக்குகளை பதிவு செய்வது .உள்ளிட்டவை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தேர்தல் நடைமுறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது.
தேர்தலில் வாக்களிக்கும்போதுஆள்மாறாட்டம் செய்வது, ஒருவரே பல ஓட்டுகளை பதிவு செய்வது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க வேண்டும். இந்த முறைகேடுகளை தடுக்க கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் அடிப்படையிலான பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என கூறியிருந்தார்.
அரசியல் சாசனத்தின் 32வது பிரிவின் கீழ் தாக்கல் செய்த இந்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மல்யா பாக்ஜி அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது. அப்போது வழக்கு தொடர்ந்த நீதிபதி அஸ்வினி குமார் உபாத்யாய், ''மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பயோமெட்ரிக் முறையில் தேர்தலை நடத்தினால் முறைகேடுகளை தடுக்க முடியும். விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இது ஆள்மாறாட்டம் மூலமாக வாக்களிப்பதை தடுக்க இந்த செயல்முறையை கொண்டு வரலாம்.
பயோமெட்ரிக் அடையளங்கள் தனித்துவமானவை. அதனை பொய்யாக உருவாக்க முடியாது. இதனால் ஒரு குடிமகனுக்கு ஒரு ஓட்டு என்பது உறுதிய செய்யப்படும். அரசியலமைப்பின் 324வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையம் தனது முழுமையான அதிகாரங்களைப் பயன்படுத்தி இத்தகைய நடவடிக்கைகளை அமல்படுத்த முடியும்'' என்றும் வாதம் வைத்தார்.
இதனை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், ''இந்த நடைமுறைக்கு தேர்தல் விதிகளில் மாற்றங்கள் தேவைப்படும். அதோடு நிதிச்சுமையும் அதிகரிக்கும். இருப்பினும் தேர்தல் நேர்மையாக நடத்துவது அவசியம். இதனால் தேர்தலில் நேர்மையை உறுதி செய்ய அதற்கான வழிமுறைகளை கண்டறியலாம்.' என்றார்.
அதன்பிறகு உச்சநீதிமன்றம்,''முதற்கட்டமாக, சில மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கு இதை பரிசீலிக்க முடியாது. இருப்பினும், அடுத்த நாடாளுமன்ற அல்லது மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இத்தகைய முறையை பின்பற்ற வேண்டுமா? என்பதை தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும்'' என்று கூறியது. அதோடு வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
-
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டல் விடுவிப்பு.. துரைகுமார் நியமனம்.. EC அதிரடி -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications