மாவோயிஸ்ட்டுகள் தொடர்பு: பேராசிரியர் சாய்பாபா விடுதலை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் மாற்றுத் திறனாளி பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த சாய்பாபா. இவருக்கு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி கடந்த 2014இல் கைது செய்யப்பட்டார்.
உபா எனப்படும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்ட்டுகளின் தலைவர்களில் ஒருவரான முப்பல்ல லட்சுமண ராவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக சாய்பாபா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவராக இருந்த ஹேம் மிஸ்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டார்.
இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட் நாக்பூர் பெஞ்சில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் நாக்பூர் பெஞ்ச் அவர்கள் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோர் விடுதலை உத்தரவுக்குத் தடை விதிக்க நேற்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருந்தது.
மேலும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி இது மேல்முறையீட்டு மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் மாற்றுத் திறனாளி பேராசிரியர் உள்ளிட்ட 5 பேரை விடுவிக்கும் மும்பை ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications