சுஷ்மா ஸ்வராஜின் வியப்பளிக்கும் கடைசி ஆசை.. கடமை தவறாது நிறைவேற்றினார் மகள்
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை அவரது மகள் பன்சூரி நிறைவேற்றியுள்ளார்.
முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய ஹரிஸ் சால்வேயிடம் பேசினார்.
அப்போது சுஷ்மா கூறியது குறித்து ஹரிஸ் சால்வே நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அவர் கூறுகையில் நான் கடந்த மாதம் 6-ஆம் தேதி இரவு 8.40 மணிக்கு சுஷ்மாவிடம் பேசினேன். அப்போது அவர் எனக்கு கொடுக்க வேண்டிய ஒரு ரூபாய் கட்டணத்தை தர வேண்டும் என தெரிவித்தார்.

சால்வே
நானும் அதை கட்டாயம் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தேன். ஆனால் அவரோ அதை அடுத்த நாள் காலை 6 மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்தார் என சால்வே தெரிவித்தார்.

சுஷ்மா மகள் பன்சூரி
எனினும் 6-ஆம் தேதி இரவே சுஷ்மா இறந்துவிட்டார். இதனால் சால்வேயிக்கு கொடுக்க வேண்டிய ஒரு ரூபாயை கொடுக்க முடியாமல் போயிற்று. இந்த நிலையில் வழக்கறிஞர் சால்வேயை நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்று சுஷ்மா மகள் பன்சூரி சந்தித்தார்.

மகள் பன்சூரி
இதுகுறித்து சுஷ்மாவின் கணவர் கௌசல் ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சுஷ்மாவின் கடைசி ஆசையை எனது மகள் பன்சூரி நிறைவேற்றியுள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
குல்பூஷண் ஜாதவிற்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய சால்வேக்கு ரூ 1 கட்டணத்தை கொடுத்தார் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராக ஹரிஷ் சால்வேயை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் நியமித்தார்.

ராணுவத்தால் கைது
சுஷ்மாவின் வேண்டுகோளை ஏற்று ரூ 1 கட்டணத்தில் ஜாதவுக்கு வாதாட அவர் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிதான் இந்த குஷ்பூஷண் ஜாதவ் ஆவார். ஈரானில் இருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

இந்தியா வழக்கு
இதையடுத்து ஜாதவுக்கு 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications