"நேரு.. ஐரோப்பிய தோழி... போர்விமானம்... சு.சுவாமி வீசும் 'புது குண்டு'
டெல்லி: நாட்டின் பிரதமராக நேரு பதவி வகித்த போது ஐரோப்பிய தோழி பயணம் செய்ய போர் விமானத்தை பயன்படுத்தினார் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புதிய குண்டை வீசியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, நாட்டின் போர்க்கப்பலை குடும்பத்தினர் உல்லாசமாக இருக்க பயன்படுத்தினார் என பிரதமர் மோடி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதே பாணியில் நேரு மீதும் சுப்பிரமணியன் சுவாமி ஒரு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பல் குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தார். அது இன்னொரு சம்பவத்தை நினைவூட்டுகிறது.
The Namo citing Virat misuse recalls for me the case of my father in law J.D. Kapadia ICS who as Defence Secy in the 1950s refused to give Airforce plane to ferry one of Nehru’s European mistresses. Of course he was transferred and next Secy okayed. Thus the decline be began
— Subramanian Swamy (@Swamy39) May 9, 2019
என்னுடைய மாமனார் ஜே.டி. கபாடியா 1950களில் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தார். அப்போது ஐரோப்பிய தோழி பயணம் செய்ய போர் விமானத்தை பயன்படுத்த விரும்பினார் நேரு.
மோடி.. நிதின் கட்கரி யாரும் வேண்டாம்.. மெஜாரிட்டி இல்லையெனில் இவர்தான் பிரதமர்.. பாஜக திட்டம்!
ஆனால் கபாடியா இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் உடனடியாக அவர் மாற்றப்பட்டு புதிய பாதுகாப்புச் செயலரை நியமித்து நேரு தாம் நினைத்ததை நடத்திக் காட்டினார் என பதிவிட்டுள்ளார்.