தீவிரமாக பரவுதே.. இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வந்தால் RT-PCR டெஸ்ட் எடுக்கணுமா? தமிழ்நாடு அரசு அட்வைஸ்
சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
டெல்லி: ப்ளூ காய்ச்சல் நாடு முழுக்க தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை இது தொடர்பாக முக்கியமான அறிவுரைகளை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் மக்கள் பலருக்கும் திடீரென காய்ச்சல் ஏற்படுவதும், கடுமையான உடல் வலி ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் இருக்கும் மக்கள் இடையே, முக்கியமாக குழந்தைகள், வயதானவர்கள் இடையே திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது.
இதன் அறிகுறிகள் என்னவென்று இந்திய மருத்துவ கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டிலும் இந்த கேஸ்கள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிக பேருக்கு இந்த ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ப்ளூ காய்ச்சல் பரவல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை. அதன்படி மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் இன்ஃப்ளூயன்சாவுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யலாம். மற்ற நேரங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ப்ளூ காய்ச்சல்
ப்ளூ தடுப்பூசியை கர்ப்பிணிகள் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ப்ளூ தடுப்பூசியை இணைநோய் உள்ளோரும் செலுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல் மக்கள் இந்த காய்ச்சல் வந்தால் வெளியே செல்ல கூடாது. மருத்துவமனைக்கு செல்வதை தவிர மற்ற நேரங்களில் வெளியே செல்ல கூடாது. முடிந்த அளவு அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். தேவையின்றி கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்ல கூடாது, என்பது போன்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டு உள்ளன.

அறிவுரை
H3N2 வைரஸ் இன்ப்ளுயன்சா காய்ச்சல் மட்டும் நாடு முழுக்க அதிகாரபூர்வமாக 3,038 பேருக்கு ஏற்பட்டு உள்ளதாம். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் 1,245 கேஸ்கள், பிப்ரவரியில் 1307 கேஸ்கள், மார்ச்சில் இதுவரை 486 கேஸ்கள் பதிவாகி இருக்கிறதாம். தமிழ்நாட்டில்தான் இதில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் 545 கேஸ்கள் பதிவாகி இருக்கிறதாம். மகாராஷ்டிராவில் 170 கேஸ்கள் பதிவாகி உள்ளன. குஜராத்தில் 42 கேஸ்கள் பதிவாகி உள்ளன. பஞ்சாபில் 28 கேஸ்கள் பதிவாகி உள்ளன.

காய்ச்சல்
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் சார்பாக நாடு முழுக்க உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் முக்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் ப்ளூ காய்ச்சல் குறித்த எச்சரிக்கை இதில் விடுக்கப்பட்டுள்ளது. அதில் ப்ளூ காய்ச்சல் பரவலை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மக்களுக்கு காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாநில அரசுகள் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அறிவுரை
போதிய பெட் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவ ஆக்சிஜன் போதிய அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இன்ஃப்ளூயன்ஸா போன்ற காய்ச்சல்கள் மற்றும் சில கடுமையான சுவாச பிரச்சனை பாதிப்புகள் நாடு முழுவதும் உள்ள சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். சில மாநிலங்களில் கொரோனா கேஸ்களும் உயர தொடங்கி உள்ளன. அதேபோல் ஓமிக்ரான் கேஸ்கள் சில மாநிலங்களில் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. இந்த கேஸ்களை அரசு நெருக்கமாக கண்காணிக்க வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications