வட இந்திய தொழிலாளர் வதந்தி- காஷ்யப் மீதான NSA வழக்கு சரிதான்- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு
டெல்லி: வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய யூடியூபர் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது சரியான நடவடிக்கை; அதனை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக வாதிட்டது.
தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக வீடியோக்கள் மூலம் திடீரென வதந்தி பரவியது. இது தமிழ்நாட்டிலும் வட இந்தியாவிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகள், தமிழ்நாட்டுக்கு அரசு குழுவை அனுப்பி ஆய்வும் செய்தது.
இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணைகளின் போது பாஜகவினரே திட்டமிட்டு பொய்யான இத்தகைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டிருப்பது தெரியவந்தது. இத்தகைய வீடியோக்களை திட்டமிட்டு பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது.

இதன் ஒருபகுதியாக பீகாரில் யூடியூபர் மணீஷ் காஷ்யப் தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். காஷ்யப் மீது தமிழ்நாடு, பீகாரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் காஷ்யப் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அப்போது, மணீஷ் காஷ்யப் மீது ஏன் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது மணீஷ் காஷ்யப் மீது ஏன் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது என்பதற்கான விளக்கத்தை தமிழ்நாடு அரசு தரப்பு முன்வைத்தது. அப்போது, பொய்யான வீடியோ என தெரியும் பொய்யான தகவல்களுடன் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தில் வீடியோக்களை பகிர்ந்தவர் காஷ்யப். வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யபப்டுவதாக பொய் தகவல் பரப்பினார். ஆகையால் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கை சரி என வாதிடப்பட்டது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications