டெல்லி அதிரடியில் தமிழச்சி தங்கபாண்டியனும் இணைந்தார்.. என்ன செய்வார் பியூஷ் கோயல்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனது தொகுதி இப்பிரச்சினை தொடர்பாக, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார் திமுக தென் சென்னை தொகுதி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்.

சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.. இதையடுத்து பலம் கொண்ட எதிர்க்கட்சி குழுவாக அந்தக் கூட்டணி உருவாகியுள்ளது.

Tamilachi Thangapandian today met union railway minister Piyush Goyal

லோக்சபா கூட்டதொடர் ஆரம்பித்த உடனேயே திமுக எம்பிக்கள் அதிரடியை ஆரம்பித்துவிட்டனர். மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் பேசி தினசரி ஏதாவது ஒரு செய்தியில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றனர்.

தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட சீனியர்கள் வரிசையில் முதல் முறையாக எம்பி ஆகியுள்ள தமிழச்சி தங்கபாண்டியனும் சேர்ந்துள்ளார். இன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இது குறித்து தமிழச்சி தங்கபாண்டியன் சொல்வதை கேளுங்கள்.

தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 'வேளச்சேரி - பரங்கிமலை' வழித்தடத்தில் 'சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு (Chennai MRTS)' திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆவன செய்யும்படி மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்களை இன்று (ஜூலை 02.2019) சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழச்சி தங்க பாண்டியன் கோரிக்கையை தொடர்ந்து என்ன செய்வார் பியூஷ் கோயல் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+