Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசிய கெஜ்ரிவால்.. தேர்தல் ஆணையத்தில் மாணவர்கள் புகார்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சித்தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசி இருக்கிறார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரச்சனை என்ன

பிரச்சனை என்ன

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ கால் ஒன்று தேர்தலை ஒட்டி டெல்லி மக்களுக்கு சென்றது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவால் ஆடியோவில் பேசி இருந்தார். அதில், டெல்லியில் பிற மாநில மக்களின் ஆதிக்கம் அதிகம் ஆக்கிவிட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் டெல்லி வாசிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

மாணவர்கள் கண்டனம்

மாணவர்கள் கண்டனம்

இதற்கு தற்போது டெல்லி பல்கலையில் படிக்கும் தமிழ் மாணவர்களின் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ள கருத்தில், ஒரு மாநில முதல்வர் இப்படி பேச கூடாது. நாங்கள் யாருடைய வாய்ப்பையும் பார்க்கவில்லை. நாங்கள் திறமையை வைத்து மதிப்பெண் மூலம் மேலே வந்து இருக்கிறோம்.

உண்மை என்ன

உண்மை என்ன

டெல்லி பல்கலை.யில் அதிகம் படிப்பது, உத்தர பிரதேச மற்றும் பஞ்சாப் மாநில மக்கள்தான். ஆனால் அவர்களை விட்டுவிட்டு எங்களை எதிர்ப்பது ஏன். எங்களை இப்படி பிரித்து தனியாக நிற்க வைப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழகத்தை பற்றி மட்டும் இவர்கள் ஏன் பேசுகிறார்கள் என்று சங்கத்தில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

புகார் அளித்துள்ளனர்

புகார் அளித்துள்ளனர்

இதுகுறித்து தற்போது இந்த தமிழக மாணவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மக்களிடையே பிரிவினையை தூண்டி வாக்கு கேட்கிறார் கெஜ்ரிவால் என்று புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+