முதல்ல மோடி தடுப்பூசி போடணும்..அப்புறம்தான் நான் போடுவேன்...அடம்பிடிக்கும் தலைவர்..யாருனு பாருங்க!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நான் அதை போடுவேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.
மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகை நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ளது. தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புனேவை சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனத்தின், 'கோவாக்சின்' தடுப்பூசி ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2-ம் கட்ட ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடந்தது. ஏற்கனவே முதற்கட்ட ஒத்திகை நடந்து முடிந்து விட்டது. எனவே நாடு முழுவதும் இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி பக்கவிளைவுகள் ஏற்படுத்துவதாலும், அதன் நம்பகத்தன்மையில் சந்தேகம் எழுவதாலும் இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கு அவசரம் காட்ட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டும் வகையில் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்.ஜே.டி) தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் கருத்து தெரிவித்து உள்ளார். தடுப்பூசி தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தேஜ் பிரதாப் யாதவ் பதிலளித்து கூறியதாவது:-
நாட்டில் தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. எனவே பிரதமர் நரேந்திர மோடி முதலில் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நான் தடுப்பூசி எடுத்து கொள்வேன். நாம் அதனை தயங்காமல் போடுவோம் என்று கூறியுள்ளார்.
'பா.ஜ.க. அரசின் தடுப்பூசியை நான் நம்ப மாட்டேன். அதனால் நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன்" என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications