பஞ்சாப் பயங்கரவாதிகள்- நிழல் உலக தாதாக்கள் தொடர்பு- 6 மாநிலங்களில் 100 இடங்களில் NIA அதிரடி ரெய்டு
டெல்லி: பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல், நிழல் உலக தாதாக்களுக்கு சொந்தமான 100 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு ஏஜென்சியான NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள், போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல், நிழல் உலக தாதாக்களின் இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உபி, உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் இந்த அதிரடி சோதனை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மோகாவில் ராஜேந்தர் நகரில் தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் தல்வாண்டி பங்கேரியா, தூர்கோட், நிதவாலா கிராமங்களில் நிழல் உலக தாதாக்களுக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துகின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் முக்த்சார் மாவட்டத்தில் 2 இடங்களிலும் பெரோஸ்பூர் மாவட்டத்தில் 3 இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் சிர்சா, ஜஜ்ஜார், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குருகிராமில் தொழிலதிபர் வீடு ஒன்று என்.ஐ.ஏ. அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி போலீசார் இதேபோல சோதனை நடத்தி பயங்கரவாதிகள், நிழல் உலக கும்பல், ஆயுத தரர்கள் என 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கனடா,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவில் குற்ற செயல்கள், பயங்கரவாத செயல்களை நிகழ்த்துவதற்கு இவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏராளமான வழக்குகளைப் பதிவும் செய்திருக்கின்றனர். தற்போதைய சோதனையிலும் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்பது என்.ஐ.ஏ. அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.
#WATCH | Visuals from Haryana's Bahadurgarh as NIA conducts searches at more than 100 locations across six states. The searches are underway in connection with terror-narcotics smugglers-gangsters nexus cases. pic.twitter.com/Z36i8oA8Kc
— ANI (@ANI) May 17, 2023
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications