தீவிரவாத குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கையில் சரிவு.! மத்திய அரசு தகவல்
டெல்லி: தீவிரவாத இயக்கங்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளதாக, உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாலக்கோட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு பின், ஜம்மூ- காஷ்மீரில் எல்லை தாண்டிய ஊடுருவல் குறைந்துள்ளதா என மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நிதியானந்த் ராயிடம் எழுத்து பூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய ராய், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது எல்லை தாண்டிய ஊடுருவல் கடந்த 6 மாதத்தில் மட்டும் 43% குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் பாலக்கோட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு பின், காஷ்மீாில் தீவிரவாதம் சார்ந்த சம்பவங்கள் 28 சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கிஷன் கூறியுள்ளார்.
மேலும் மாநிலங்களவையில் பல கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கிஷன் ரெட்டி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவான 370ஐ நீக்கம் செய்வது தொடர்பான விவகாரத்தில் வெளிநாட்டு அமைப்புக்கோ, அரசுகளுக்கோ தொடர்பு இல்லை என்றார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது தொடர்பாக எந்நாட்டு அரசுகளும் தலையிட உரிமையில்லை. எல்லை தாண்டிய ஊடுருவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு , எல்லைகளில் மின்சார வேலி அமைத்தல், மேம்பட்ட உளவுத்துறை மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, மேம்பட்ட தொழில்நுட்ப ஆயுதங்களுடன் பாதுகாப்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது மற்றும் ஊடுருவல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என, பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் இந்தோ-பாக் எல்லையில் கட்டுப்பாட்டிலுள்ள மின் வேலி, ஊடுருவல் தடுப்பு அமைப்பு ஆகியன தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
AIOS க்கான மின்சார தேவைகள்பவர் கிரிட் மூலமாகவும், பிற இடங்களில் ஜெனரேட்டர்கள் மூலமாகவும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications