TET exam: ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற ”டெட்” கட்டாயம்.. விருப்பம் இல்லன்னா.. உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: ஆசிரியர் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற டெட் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சிறுபான்மை நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும்
5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்றும் தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம், அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், சிறுபான்மை நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா? எனக்கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், உயர் அமர்விற்கு இந்த வழக்கை பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
மத்திய கல்வி உரிமைச்சட்டம்
கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுபவர்கள், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி தமிழகத்தில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இதற்கிடையே, ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபன்கர், தத்தா அமர்வு, மேற்கண்ட அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்
தீர்ப்பின் போது பல்வேறு கருத்துக்களையும் நீதிபதிகளையும் கூறியுள்ளனர். குறிப்பாக ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருக்க கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியில் தொடரும் ஆசிரியர்கள் டெட் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால் வேலையை விட்டு வெளியேறலாம்.
இறுதி சலுகையுடன் கட்டாய ஓய்வை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பாதிக்கும் பட்சத்தில் இது தொடர்பாக விசாரிக்க அதற்கான வழிமுறைகளை கண்டறிய இந்த வழக்கை உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications