ரமலான் தினத்தில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம்... சிபிஎஸ்இ அறிவிப்பு!
டெல்லி: மார்க்சிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று ரமலான் தினத்தில் நடைபெற இருந்த 10,12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு மாற்றப்பட்டுள்ளது.
மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவின்பேரில் சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே13, 15 நடக்க இருந்தது. அப்போது ரமலான் பண்டிகை வருவதால் இந்த தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் கடந்த பிப்.8-ம் தேதி மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்இ இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் ரமலான் இஸ்லாமியர்களின் முக்கிய திருநாள். இவ்வாண்டு மத்திய, மாநில அரசுகள் மே 14-ம் தேதி ரமலான் விடுமுறையை அறிவித்துள்ளன.
ஆனால் பிறை தென்படுவதைப் பொறுத்து ரமலான் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாற வாய்ப்புள்ளது. இதைக் கணக்கில் கொள்ளாமல் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை மே 13, 15 தேதிகளில் அறிவித்துள்ளது. ரமலான் தேதி மாறும் பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். எனவே தேர்வு தேதிகளை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தேர்வுத் தேதிகளை மாற்றுவதற்கான கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பதில் அளித்தார். இந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் கூறியபடியே ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம் செய்து சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
கரப்பான் பூச்சி ஜனதா இன்று புனேவில் போராட்டம்! தர்மேந்திர பிரதான் விலகும் வரை விட மாட்டோம் என உறுதி -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications